தஞ்சாவூர், செப்.9 - இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை மாவட்டத்தில் இருந்து காணொலி வாயிலாக சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து, தஞ்சா வூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் கரி காலச் சோழன் கலையரங்கத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், திங்கள் கிழமை சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன் மாநிலங் களவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்ட மன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கி அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன் தெரிவிக்கை யில், “மாவட்டத்தில் 1,121 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 14,354 உறுப்பினர்களுக்கு ரூ.106.26 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் 15,568 மகளிர் சுய உதவிக் குழுக் களும், நகரப்பகுதியில் 4,412 மகளிர் சுய உதவிக்குழுக்களும் என கூடுதலாக 19,980 மகளிர் சுய உதவிக் குழுக்களில் 2,39,760 சுய உதவிக் குழு உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்” என்றார். திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி கலைய ரங்கில் நடைபெற்ற விழாவில் நக ராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, 1189 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.100.54 கோடி மதிப்பீட்டில் கடனுதவி களை வழங்கினார். மாவட்ட ஆட்சி யர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டி யன், ஸ்டாலின்குமார், பழனி யாண்டி, மாநகராட்சி ஆணையர் சரவணன், அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சி யர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப் பினர் எம்.பன்னீர்செல்வம், மயி லாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர், 753 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பி னர்களுக்கு ரூ.40 கோடியே 77 லட்சம் மதிப்பிலான வங்கி கடனு தவிகளை வழங்கினர். தொடர்ந்து, மாவட்ட அளவில் சுய உதவிக் குழுக்களுக்கு அதி களவில் வங்கிக்கடன் வழங்கிய சிறந்த வங்கிகளான 7 வங்கி களுக்கு கேடயம் மற்றும் நற்சான்றி தழ்களை மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினர். மயிலாடுதுறை மாவட் டத்தில் 8251 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.