புதுக்கோட்டை, ஆக.9 - புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் ‘மக்களு டன் முதல்வர்’ திட்ட முகாமில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநா தன் மக்களிடம் கோரிக்கை கள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார். புதுக்கோட்டை மாவட்டத் தில் 11.7.2024 முதல் 10.9.2024 வரை 13 ஊராட்சி ஒன்றியங்க ளில் உள்ள 495 கிராம ஊராட்சிகளில் 66 ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நட வடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் அறி வுறுத்தினார்.