districts

img

புத்தக வாசிப்பை அதிகரிக்க முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார்

மயிலாடுதுறை, நவ.21 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி யில் பள்ளிக் கல்வித்துறை பொது நூலக இயக்ககம் சார்பில் டாக்டர் எஸ். ஆர்.அரங்கநாதன் விருது, கேட யங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.  விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார். மயிலாடுதுறை எம்.பி செ.ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் நிவேதா எம்.முருகன்,  எம்.பன்னீர்செல்வம், எஸ்.ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது நூலக இயக்குநர் இளம்பகவத் வரவேற்றுப் பேசினார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய் யநாதன் வாழ்த்திப் பேசினார். அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறந்த நூலகங்களுக்கு கேடயம் மற்றும் நூலக ஆர்வலர்களுக்கு விருது களை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “நூலகர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. நூலகத் தந்தை பிறந்த சீர்காழியில் இந்த விழா  நடத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும் என தமிழக முதல்வர் தெரிவித்ததன் பேரில், இவ்விழா சீர்காழியில் நடத்தப் பட்டுள்ளது.  

நூலகங்களில் புத்தகங்களின் வரி சையை அனைவரும் எளிதாக புரிந்து  கொள்ளும் வகையில் நூலகம் அமைய  வித்திட்டவர், இங்கிலாந்து வரை சென்று நூலக அமைப்பினை கற்றுக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்தி யவர் ‘நூலகத்தின் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன்’. தமிழக முதல்வர் நூலக வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பல் வேறு திட்டங்களை செயல்படுத்தி வரு கிறார். மதுரையில் கலைஞர் நூற் றாண்டு நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களுக்கு பெருமை  சேர்க்கும் வகையில் உள்ளது. வாசிப்பை ஒரு இயக்கமாக எடுத்து  செல்லக்கூடிய வகையில் நூலகங்கள்  உள்ளன. நூலகர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நூலகர்களுக்கு அரங்க நாதன் பெயரில் விருதுகள் வழங்கப்படு கின்றன. ஆசிரியர்கள், நூலகர்களின் பணி தலைசிறந்தது” என்றார். விழாவில் 59 பேருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்கினார். விருது பெற்ற, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்ப்புற நூலகர் முனை வர் லலிதா, விருதுடன் தமக்கு வழங்கப் பட்ட ரூ.5 ஆயிரம் தொகையை, முதல் வர் நிவாரண நிதிக்காக அமைச்சரி டமே திருப்பி வழங்கினார். முன்னதாக சீர்காழியில் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் நினைவாக ரூ.1  கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதி தாகக் கட்டப்பட்டு வரும் நூலகக் கட்டி டத்தை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.