தஞ்சாவூர், ஜூலை 10-
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறையைச் சேர்ந்த வர் ப.ஆறுமுகம் (45). மினி லாரி உரிமை யாளர் மற்றும் ஓட்டுநரான, இவரது லாரி யில் அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல் வன் (50) உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆறுமுகமும், தமிழ்செல்வனும், தஞ்சா வூரில் உள்ள காமராஜ் மார்க்கெட்டில், காய்கறியை இறக்கிவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கண்டியூர் அருகே வளைவில் திரும்பும் போது, அரியலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சிமெண்ட் மூட்டை களை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, காய்கறி மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், மினி லாரி அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் ஆறுமுகம், தமிழ்ச் செல்வன் ஆகிய இருவரும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். இதுகுறித்து நடுக் காவேரி காவல்துறையினர் வழக்குப் பதிந்து, சிமெண்ட் லாரி ஓட்டுநரான புதுக் கோட்டை மாவட்டம் வடகாட்டை சேர்ந்த சுதாகர் (42), என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
திருவையாறு - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு செல்லும் லாரி கள், அரியலூர் பகுதியில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகள் அதிவேகமாக வருவ தால், அடிக்கடி திருவையாறு பகுதிகளில் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. லாரிகள் குறைவான வேகத்தில் செல்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.