districts

கரும்பில் குருத்து முறுக்கல் நோய்: பாதுகாக்கும் வழிமுறைகள்

அரியலூர், ஜூன் 17 - அரியலூர் வட்டாரத்தில் கரும்பு பயிர் முக்கிய பணப் பயிராகும். இப்பயிர் நடப்பு பரு வத்தில் 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வளர்ச்சி பருவத்தில் உள்ளது. அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி  வேளாண்மை அலுவலர்கள் வயலாய்வு மேற்கொண்ட போது, இப்பயிரில் சில இடங்க ளில் மாவுப்பூச்சி மற்றும் குருத்து முறுக்கல் வாடல் நோய் தென்படுகிறது. குருத்து முறுக்கல் நோயின் அறிகுறிகள் பொக்கபாங் என்று அழைக்கக் கூடிய குருத்து முறுக்கல் நோய் பூஞ்சானம் மூலம் பரவக் கூடியதாகும். தாக்கப்பட்ட இளம்பயிர் முழு வளர்ச்சியடைந்து கரும்பாகாது. வயலில் சொட்ட விழும். தாக்கப்பட்ட பயிரின் கட்டைக் கரும்பின் தூர்களின் எண்ணிக்கை குறைந்து விடும். குருத்து முறுக்கல் எனும் பூஞ்சான நோய் மாவுப்பூச்சியால் பரவும். இந்த குருத்து முறுக்கல் நோயினால் இலைகள் திருகியும், முரடு தட்டியும், குறுகி நேர்குத்தியும் நிற்கும். தீவிர  நோய் தாக்குதலின் போது குறுத்து காயும். நடவுப் பயிரைவிட கட்டைக் கரும்பில் இப்பூச்சி  மற்றும் நோயின் தீவிரம் அதிகம் தென்படும். இதனைக் கட்டுப்படுத்த கரும்பு இனப் பெருக்க நிலையம், கோயம்புத்தூர் கரும்பு  ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி, திருச்சி மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் பரிந்துரைக்கப்பட்ட தொழில் நுட்பங் களை பின்பற்றி கட்டுப்படுத்தலாம். மேலாண்மை முறைகள் கரும்பை தொடர்ச்சியாக 3 முறைக்கு மேல்  பயிரிடக் கூடாது. பயிர் சுழற்சி முறையினை பின்பற்ற வேண்டும். ஏக்கருக்கு 5 மெ.டன் தொழு உரம் அல்லது வேப்பம் புண்ணாக்கு 1 மெ.டன் இட வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் கார்பன்டாசிம் 50 சதவீதம் WP  ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கி.என்ற அளவிலும்  கலந்து வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். ஒன்றிரண்டு மாவுப் பூச்சிகள் குருத்தருகில் தென்பட்டவுடன், இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல்.O.3 மி.லி/லி. என்ற அளவிலும் கார்பன் டாசிம் 50 சதவீதம் 1கிராம்/லி என்ற அளவிலும்  அடிக்க வேண்டும். மருந்தடித்த 15-20 நாட்க ளில் பூச்சி மறுபடி தென்பட்டால் மீண்டும் ஒரு முறை மருந்துக் கலவையை உபயோகப் படுத்தி இந்நோயிலிருந்து கரும்புப் பயிரினை பாதுகாத்து அதிக மகசூல் பெறலாம் என அரிய லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.