கடமலைக்குண்டு, ஆக.21-
தேனி மாவட்டம் வருசநாடு அருகே கோம்பைத் தொழு கிராமத்தில் மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மேகமலை வனப்பகுதியில் மழை இல்லை. அதன் காரணமாக அருவியில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் தொடர் வெயில் தாக்கம் காரணமாக சனிக்கிழமை மேகமலை அருவி முற்றிலுமாக வறண்டு போனது.
தற்போது அருவியின் மேல் பகுதியில் மட்டும் லேசான அளவில் நீர்வரத்து உள்ளது. அந்த இடத்தில் இருந்து மேகமலை, குமணன் தொழு உள்ளிட்ட 4 ஊராட்சிகளை சேர்ந்த 52 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
எனவே அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேல் பகுதிக்கு சென்று குடிநீரை மாசுபடுத்தும் அபாயம் நிலவி யது. இதையடுத்து நீர்வரத்து ஏற்படும் வரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்க வேண்டும் என கோம்பைத்தொழு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அருவி அருகே சோத னைச் சாவடியில் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பும் பணி களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த னர். ஆனால் வனத்துறையினர் அனுமதி இல்லாததால் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.