தஞ்சாவூர், ஏப்.22-
டெல்டா மாவட்டங்களில் முதல்முறையாக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவுடன் ஒருங் கிணைக்கப்பட்ட சி.டி ஸ்கேனர் இயந்திரம் வெள்ளிக் கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நவீன சி.டி. ஸ்கேனரை முதல் தலைமுறை பட்டதாரி மருத்துவர் சங்கவி தொடங்கி வைத்தார். இதைத்தொ டர்ந்து, மருத்துவமனை தலைவர் எஸ்.குருசங்கர், இணை நிர்வாக இயக்குநர் காமினி குருசங்கர் உள்ளிட்டோர் நவீன ஸ்கேனரை பார்வையிட்டனர். அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளர் ஆர்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.