districts

img

முத்துப்பேட்டை அருகே மக்களை தேடி மருத்துவ முகாம்

முத்துப்பேட்டை, பிப்.15- முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. தேசிய காச நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் நிக்சய் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கையின் கீழ், நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் 100 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய்த்தடுப்பு குறித்து நலக்கல்வி அளிக்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராசேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், செந்தில் கலந்துகொண்டனர்.