districts

திருச்சி முக்கிய செய்திகள்

தூய்மைப்  பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

பாபநாசம், செப்.25 - கபிஸ்தலம் மேம் படுத்தப்பட்ட அரசு  ஆரம்ப சுகாதார நிலை யம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது.  தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூ ராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமில் பங் கேற்ற தூய்மைப் பணியா ளர்கள், ஊழியர்களுக்கு ரத்த அழுத்தம், இரத்தத் தில் சர்க்கரை அளவு பரி சோதிக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்களுக்கு வட்டார மருத்துவ அலு வலர் தீபக், டாக்டர் ஜெகன் பொது மருத்து வம், தோல் உள்ளிட்ட பரி சோதனை மேற்கொண்ட னர். மருந்து, மாத்திரை கள் இலவசமாக வழங்கப் பட்டன. இதில் பேரூ ராட்சித் தலைவி புனித வதி, செயல் அலுவலர் பழனிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.       

மக்கள் தொடர்பு முகாம்

மயிலாடுதுறை, செப்.25 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி 114 பயனாளிகளுக்கு ரூ.89,46,712 மதிப்பிலான உதவிகளை வழங்கினார். 

ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை மாநாடு

திருவாரூர், செப்.25 - சிஐடியு திருவாரூர் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் கிளை மாநாடு சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகத்தில் செவ் வாய்க்கிழமை  நடை பெற்றது. மாநாட்டிற்கு எம்.ரா ஜேந்திரன் தலைமை வகித்தார். மாநாடு கொடியை ஜி.பழனிவேல்  ஏற்றினார். சிபிஎம் மாநி லக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மாநாட்டை துவக்கி  வைத்து உரையாற்றி னார். சிஐடியு மாவட்டச்  செயலாளர் டி.முருகை யன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் டி.வீரபாண்டி யன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினார். மாநாட்டில் கிளைச் செய லாளராக ஆர்‌.ஐயப்பன் தேர்வு செய்யப்பட்டார். சிஐடியு மாவட்டச் செய லாளர் எம்.கே.என்.அனிபா மற்றும் மாவட்ட  நிர்வாகி கே.பி. ஜோதி பாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 

கரூர், செப்.25 - கரூர் மாவட்ட ஆட்டோ, டாக்ஸி டெம்போ மற்றும் ஓட்டு நர்கள் சங்கத்தின் (சிஐடியு) அரவக்குறிச்சி ஒன்றியக் குழு  சார்பில் அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க அரவக்குறிச்சி ஒன்றி யத் தலைவர் எ.சக்கரைமுகமது தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், கட்டுமான சங்க  மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, அரவக்குறிச்சி பேரூராட்சி கவுன்சிலர் கே.வி.கணேசன், ஒன்றிய பொறுப் பாளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் காயிதேமில்லத், உழவர் சந்தை ஆட்டோ நிலைய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 2019 புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த கூடாது. ஸ்டிக்கர், புகை சான்று கட்டணங்களை முறைப்படுத்த  வேண்டும். பிஎன்எஸ் சட்டப் பிரிவை அமல்படுத்துவதை கைவிட வேண்டும். தமிழக அரசின் தேர்தல் கால வாக்குறு திகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

பனை விதை நடவு

அறந்தாங்கி, செப்.25 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றி யத்தைச் சேர்ந்த 52 கிராமங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பனை விதைகள்  நடவு செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் 52 ஊராட்சி களில், 154 தொகுப்பில் பனை விதை நடவு செய்யும் பணி களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன் மற்றும்  நளினி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலா ளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் நூறு நாள் திட்ட  பணியாளர்கள் மேற்கொண்டனர்.

உழவர் ஆலோசனைக் குழு கூட்டம்

தஞ்சாவூர், செப்.24 -  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வட்டார உழவர் ஆலோ சனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம் வரவேற் றார்.  வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சன்மதி தலைமை வகித்துப் பேசுகையில், திட்டம் குறித்தும், விவசாயி களுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள், மானியங்கள்  குறித்தும், அட்மா திட்ட ஆலோசனைக் குழு உறுப்பி னர்களிடம் எடுத்துக் கூறினார். வேளாண்மைப் பொறியியல் துறை உதவிப் பொறியாளர் திவ்யா, வேளாண்மை பொறியி யல் துறை திட்டங்கள் குறித்தும், தோட்டக்கலை உதவி  அலுவலர் குடியரசன், தோட்டக்கலை துறையில் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துக் கூறினர். இந்தக் கூட்டத்தில் அட்மா திட்ட ஆலோ சனை குழு உறுப்பினர்கள் 25 பேர் கலந்து கொண்டனர்.  குருவிக்கரம்பை சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில், வேளாண்மை த்துறையின் கீழ் அட்மா திட்டத்தில் வட்டார உழவர் ஆலோ சனைக் குழு கூட்டம், குருவிக்கரம்பை வேளாண்மை உதவி  இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.  வேளாண்மை உதவி இயக்குநர் (பொ)ஜி.சாந்தி தலைமை வகித்தார். அட்மா திட்ட உழவர் ஆலோசனை குழுத்  தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்துப்  பேசினார். வேளாண்மை துணை அலுவலர் து.சிவசுப்பிரமணி யன் வரவேற்றார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மோ. சுரேஷ் நடப்பாண்டில் அட்மா திட்டத்தில் செயல்படுத்தக்  கூடிய திட்டங்களான கண்டுணர்வு சுற்றுலா, செயல் விளக்கம், பண்ணைப் பள்ளி,  மாவட்டத்திற்குள்ளான விவ சாயிகள் பயிற்சி குறித்து எடுத்துக் கூறினார்.

புகையிலைப் பொருள் விற்ற கடைகளுக்கு சீல் ரூ.75 ஆயிரம் அபராதம்

தஞ்சாவூர், செப்.25 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி, சேதுபாவாசத்திரம் பகுதி யில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில், காவல்துறை உதவி ஆய்வாளர் பெத்தபெருமாள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை யினர் அடங்கிய குழு வினர் திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.  அப்போது இரு கடை களில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்ட றியப்பட்டது. இதில் சேது பாவாசத்திரத்தில் உள்ள  ஒரு கடையில் இரண்டாவது  முறையாக விற்பனை  செய்வது கண்டறியப்பட்ட தால் அந்தக் கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், மரக்காவலசையில் ஒரு கடைக்கு ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரு கடைகளும் தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டன.

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள்

தஞ்சாவூர்/புதுக்கோட்டை/பெரம்பலூர், செப்.25 -  தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செப்.27 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 10 மணிக்கு தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில்  மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற உள்ளது. குறைதீர்  கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை  தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாக கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக் களை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.  புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.9.2024 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியள வில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா  தலைமையில் நடைபெற உள்ளது.   இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்க ளது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன  தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொ ருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண்  உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்ப டும் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறு மாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் செப்.27 அன்று காலை 11 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட  ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமாக மற்றும் விவசாயிகள் மேம்பாட் டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறை யீடுகள் குறித்து விவாதிக்கப்படும். விவசாயி கள் அன்றைய தினம், தங்களது குறைகளை  தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட  ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

கீழக்கொட்டையூர் பருத்தி மறைமுக  ஏலம்

பாபநாசம், செப்.25 - தஞ்சாவூர் விற்பனைக் குழு, பாபநாசத்தை அடுத்த  கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர்  ஒழுங்குமுறை  விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்ப னைக் கூட கண்காணிப்பா ளர் பிரியமாலினி தலைமை வகித்தார்.  இதில் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள  கிராமங்களில் இருந்து மொத்தம் 541 விவசாயிகள், 491 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்ப கோணம், செம்பனார்கோ வில், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 வணிகர்கள் ஏலத் தில் கலந்து கொண்டு,  அதிகபட்சம் குவிண்டா லுக்கு ரூ.8000, குறைந்த பட்சம் ரூ.6599, சராசரி ரூ. 7229 என விலை நிர்ணயித்த னர். பருத்தியின் மதிப்பு ரூ.35 லட்சம்.

தஞ்சை மாவட்டத்தில்  சிபிஎம் கிளை மாநாடுகள்

தஞ்சாவூர், செப்.25 -  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில்  சிபிஎம் கிளை மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மூத்த தோழர்  வீ.கருப்பையா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், புதிய கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்யப் பட்டனர். நிஜார் முகைதீன் (செந்தலைவயல்), எஸ்.அகி லன் (கழுமங்குடா கிளை-1), ரஞ்சித் (கழுமங்குடா கிளை-2), நவநீதன் (பெருமகளூர்), ஆ.சிவமணி (மருங்கப் பள்ளம்), கா.வைத்திலிங்கம் (மணக்காடு), கே.சேகர் (செம்பருத்தி நகர்), எம்.ஜோதி (ரெண்டாம்புளிக்காடு), ஜெ.ராஜேஷ்கண்ணா (அழகியநாயகிபுரம்), வி.நீல கண்டன் (கொரட்டூர்), முருகன் (குருவிக்கரம்பை), பாலசந்தர் (மேலமணக்காடு), கே.சீனிவாசன் (நெல்லி யடிக்காடு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  பட்டுக்கோட்டை  பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் சிபிஎம் கிளை மாநாடு கள் நடைபெற்று வருகின்றன. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மாநாடு களை நடத்தி வருகின்றனர்.  மெரினா ஆறுமுகம் (கரிக்காடு), விஜேந்திரன் (சிவக்கொல்லை), கே.செந்தில் (லெட்சத்தோப்பு), தமிழர சன் (அண்ணா குடியிருப்பு), சேதுகுமார் (தங்கவேல் நகர்),  நிவேந்திரன் (அந்தோணியார்  கோவில் தெரு), லெனின்  (கீழக்கரம்பயம்), சுரேஷ் (நம்பிவயல்), ராமமாணிக்கம் (தம்பிக்கோட்டை வடகாடு), சூசைராஜ் (வீரக்குறிச்சி), ஞானசேகரன் (சுக்கிரன்பட்டி), தி.தனபால் (கலை இலக்கிய அரங்கம் - கட்சிக் கிளை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மதுக்கூர்  மதுக்கூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் சிபிஎம் கிளை மாநாடுகளை மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.  எம்.ராமசாமி (அத்திவெட்டி), ஜெ.ஹரிதாஸ் (சிராங் குடி), கே.லெட்சுமணன் (கீழக்குறிச்சி தெற்கு), எஸ்.பன்னீர் செல்வம் (கீழக்குறிச்சி வடக்கு), தெ.பஞ்சாட்சரம் (மூத்தாக்குறிச்சி கொல்லடிக்கொல்லை), த.விமல நாதன் (ஒலயக்குன்னம்) ஆகியோர் புதிய கிளைச் செயலா ளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். திருவோணம்  திருவோணம் ஒன்றியத்தில் நடைபெறும் கிளை மாநாடுகளை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.ராமசாமி, ஆர்.வாசு, ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் நடத்தி வருகின்ற னர்.  கணேசன் (சிவவிடுதி), ஆர்.மணிகண்டன் (வெட்டு வாக்கோட்டை), மணிராஜ் (நெய்வேலி), ஏ.வி.பெரிய சாமி (இடையாத்தி மேற்கு), கோவிந்தராசு (லெனின் நகர்), எஸ்.குமரவேல் (தெற்கு கோட்டை) ஆகியோர் கிளைச்  செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் சிபிஎம் கிளை மாநாடுகள் 

மன்னார்குடி, செப்.25 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் நடந்த கிளை மாநாடுகளில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.எஸ்.கலியபெருமாள், பி.கந்தசாமி, ஒன்றியச்  செயலாளர் டி.ஜான் கென்னடி, மாவட்டக் குழு உறுப்பி னர் ரெ.சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுதேவங்குடி செயலாளராக கே.கோபால கிருஷ்ணன், மேலாளவந்தசேரி செயலாளராக பி.ரா ஜேந்திரன், ஒளிமதி கிளைச் செயலாளராக ஜெ.பிரகாஷ்,  பழைய நீடாமங்கலம் செயலாளராக எஸ்.செல்வராஜ், பழங்காலத்துர் செயலாளராக ஏகாம்பரம், பெரம்பூர் செய லாளராக  எம்.குருமூர்த்தி, முன்னாவால்கோட்டை செய லாளராக கே.விவேகானந்தம், ரிஷியூர் செயலாளராக  கே. குணசேகரன், வாளாச்சேரி செயலாளராக ஏ.முருகேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இணையவழி வர்த்தகம் பெண்ணிடம் ரூ. 14.77 லட்சம் மோசடி

தஞ்சாவூர், செப்.25 -  தஞ்சாவூர் மாவட்டத்தில் இணையவழி வர்த்தகம் எனக் கூறி பெண்ணிடம் ரூ.14.77 லட்சம் மோசடி செய்த  மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த  42 வயது பெண்ணுக்கு 2023 நவம்பர் மாதம் வாட்ஸ் ஆப் செயலில், இணையவழி வர்த்தகத்தில் முதலீடு செய்தால்  நிறைய வருமானம் கிடைக்கும் என தகவல் வந்தது. இதை  நம்பிய அப்பெண் அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணில்  தொடர்பு கொண்டார்.  அப்போது எதிர்முனையில் மர்ம நபர் கூறிய வங்கிக்  கணக்குக்கு முதலீடாக பணம் அனுப்பத் தொடங்கினார். முதலில் சிறு, சிறு தொகை கிடைத்ததை நம்பிய அந்தப்  பெண் பல்வேறு தவணைகளில் ரூ.14.77 லட்சம் அனுப்பி னார். அதன் பிறகு எதிர் முனையில் உள்ள மர்ம நபர்கள்  இவரது கைப்பேசி அழைப்பைத் துண்டித்துவிட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த பெண் தஞ்சாவூர் சைபர்  குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறை யினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செந்துறையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கி வைப்பு

அரியலூர், செப். 25 - அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சிக்கு ஒன்றியத் துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில்  பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்  நாட்டப்பட்டு, முடிவுற்றப் பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு  செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டன. சிலுப்பனூர், கூடலூர், அயன்தத்தனூர், துளார் உள்ளிட்ட 19 கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்  திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணி களை மக்கள் பயன்பாட்டிற்கும் திறந்து வைத்தார். நிகழ்ச்சி களுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். 

சிறுதானியங்கள், பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா

பெரம்பலூர், செப்.25 - பெரம்பலூரில் சிறுதானியங்கள் மற்றும்  பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு இடையேயான மாவட்ட அள விலான ஊட்டச்சத்து குறித்த விழிப்பு ணர்வுப் போட்டி, கண்காட்சி மற்றும் “சிறுதா னியங்கள் மற்றும் பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழாவினை” மாவட்ட ஆட்சி யர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் மாவட்ட அளவிலான மகளிர் உதவிக் குழுவினருக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப் பட்டன. இதில் 10 மகளிர் சுய உதவிக்குழுக் களைச் சார்ந்த 180 உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். இப்போட்டியில் சிறுதானி யங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய பொருட்களால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில்  வெற்றி பெற்ற குழுவிற்கு பரிசுகள் வழங்கப் பட்டன.