பாபநாசம், ஜூலை 13-
தஞ்சாவூர் மாவடடம் கபிஸ்தலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் சார்பில் பண்டாரவாடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வளரி ளம் பெண்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் தீபக், மருத்துவர்கள் அழகு சிலம்பரசி, ஜெகன், பாரதி 80 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.
கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்தார். சுகாதார ஆய்வாளர் செல்லப்பா, எஸ்.ஹெச்.என். கலாவதி, நம்பிக்கை மையம் ஆலோசகர் செந்தர் செல்வி, பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.