districts

திருச்சி முக்கிய செய்திகள்

பள்ளி சுற்றுச்சுவர் திறப்பு

பாபநாசம், ஜூன் 23- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே திரு வைக்காவூர் ஊராட்சி யில் பாபநாசம் சட்டமன்ற  உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட பள்ளி சுற்றுச் சுவரை  பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹி ருல்லா திறந்து வைத்தார்.  இதில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பி னர் கோ.தாமரைச் செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத்  தலைவர் சுமதி, பாபநா சம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், கிராம ஊராட்சி சுதா, திரு வைக்காவூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவு னம்மாள், ஒன்றியக் குழு  உறுப்பினர் விஜயன், ஒப்பந்ததாரர் சரண் உட்பட பள்ளி ஆசிரியர் கள், மாணவர்கள், பெற் றோர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள்  சங்க கிளை அமைப்பு 

தஞ்சாவூர், ஜூன் 23-  தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றி யம், மாரனேரி ஊராட்சி யில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் புதிய கிளை தாமஸ் தலைமையில் துவக்கப் பட்டது. இதில், கிளைத்  தலைவராக தாமஸ், செய லாளராக செல்வேந்தி ரன், பொருளாளராக நாகஜோதி, துணைத் தலைவராக சந்தோஷ் மேரி, துணைச் செய லாளராக ஜெயமேரி ஆகி யோர் தேர்வு செய்யப் பட்டனர். புதிய நிர்வாகி களை அறிமுகப்படுத்தி தஞ்சை மாவட்டச் செய லாளர் பி.எம். இளங்கோ வன் பேசினார்.

மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

மயிலாடுதுறை, ஜூன் 23- மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தின் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகி களுக்கான தேர்தல் நடை பெற்று, புதிதாக தேர்ந்தெ டுக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். சங்கத்தின் செயலாளராக என்.பிரபு, தலைவராக கலைஞர், பொருளாளராக எம்.விவேகானந்தன், துணைத் தலைவர்களாக  இரா.இராதாகிருஷ் ணன், வீதிவிடங்கன், துணைச் செயலாளராக இரா.கனிவண்ணன் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். புதிய நிர்வா கிகளுக்கு சக வழக்கறி ஞர்கள், சமூக ஆர்வலர் கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கஞ்சா விற்றவர் கைது 

திருச்சிராப்பள்ளி, ஜூன் 23 - திருச்சி-தஞ்சை ரோடு  பகுதியில் கஞ்சா விற்ப தாக, மதுவிலக்கு போலீ சாருக்கு தகவல் கிடைத் தது. இதையடுத்து மது விலக்கு உதவி ஆய்வா ளர் உமா சங்கரி மற்றும் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று,  அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த காட்டூ ரைச் சேர்ந்த மைதீன் கான்  (36) என்பவரை கைது செய்தனர்.

தெளிப்பு நீர், மழைத்தூவான் அமைத்த விவசாயிகள் நுண்ணீர் பாசன மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 23- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தெளிப்பு நீர் அல்லது மழைத்தூவான் அமைத்த விவசாயிகள் மீண்டும் 3 ஆண்டுகளில் நுண்ணீர் பாசன மானியம் பெறலாம். பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் விவசாயிகள் சொட்டுநீர், தெளிப்பு நீர் அல்லது மழைத்தூவான் பாசனம் அமைக்க தோட்டக்கலைத் துறை மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. முதல் முறை மானியத்தில் கருவிகள் பெற்ற பின் அதே வயலுக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் மானியம் பெற முடியும். ஆனால், தற்போது தெளிப்புநீர், மழைத்தூவான் அமைத்த விவசாயிகள் மீண்டும் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க 7 ஆண்டுகள் காத்திருக்காமல் தங்கள் வயல்களில் பயன்பாட்டில் உள்ள தெளிப்பு நீர், மழைத்தூவான் பாசன அமைப்பினை சொட்டுநீர் பாசனமாக மாற்றுவதற்கு ஏற்கனவே தெளிப்பு நீர், மழைத்தூவான் அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட மானியத்தை கழித்து மீதமுள்ள மானியம் மட்டுமே வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in (MIMIS) என்ற வலைதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

எலக்டிரிக்கல் தொழிலாளர் சங்க புதிய கிளை துவக்க விழா

அரியலூர், ஜூன் 23- தமிழ்நாடு எலக்டிரிக்கல் தொழிலா ளர் சங்க அரியலூர் புதிய கிளை துவங்க  விழா, சிஐடியு அரியலூர் மாவட்டச் செய லாளர் பி.துரைசாமி தலைமையில் சனிக் கிழமை நடைபெற்றது. எலக்டிரிக்கல் தொழிலாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் டி.கோவிந்தராஜூ துவக்க உரை யாற்றினார். பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அமைப்பின் செயலாளர் ராஜகுமாரன், தலைவர் சம்பத் ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர். கிளைத் தலைவராக ஆர். கண்ணன், செயலாளராக எஸ். சோபன் ராஜீ, பொருளாளராக காசிராஜன், இணை  செயலாளராக ராஜகுமாரன்,  துணைத் தலைவராக சம்பத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அமைப்பு பொதுச் செய லாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் நிறை வுரை ஆற்றினார். கண்ணன் நன்றி கூறினார்.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மாணவர் சடலமாக மீட்பு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 23- ஸ்ரீரங்கம் - நெ.1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் அருகே, பாலத்தின் தூண்கள் பாதிக்கப் படாதவாறு பழைய பாலம் இருந்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீர் இந்த தடுப்புச்சுவரில் தேங்கி வழிந்தோடுகிறது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் ஏராளமானோர் குளித்து வருகின்றனர். இந்நிலையில், 10 ஆம் வகுப்பு படிக்கும் திருச்சி பீமநகரைச் சேர்ந்த சாம் ரோஷன் (15) என்பவர் தனது நண்பர்களுடன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்று உள்ளார். அப்போது, தடுப்புச் சுவருக்கு கிழக்குப் பகுதியில்  பள்ளமான இடத்தில் குளித்துக் கொண்டிருந்த சாம் ரோஷன்  நீரில் மூழ்கி காணாமல் போனார். இதைப் பார்த்த நண்பர்கள்  கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர்  ஜெகதீஷ் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஞாயிறன்று காலை 2 ஆவது  நாளாக தீயணைப்பு வீரர்கள் சிறுவன் சாம் ரோஷனை தேடும்  பணியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், சிறுவன் உடல் மீட்கப்பட்டது.

சீர்மரபினர் நல வாரியத்தில்  சேர விண்ணப்பிக்கலாம்

அரியலூர், ஜூன் 23-  அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீர்மரபினர், நல வாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு  முதல் விபத்து ஈட்டுறுதி திட்டத்தின்கீழ் உதவித் தொகை, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவுக்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திரு மண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்கு  கண்ணாடி செலவுத் தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூ தியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரு கின்றன. எனவே இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும் 18-60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அமைப்பு சாரா  நிறுவனங்களில் பணிபுரியாதவராக இருத்தல் வேண்டும் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உட லுழைப்பு தொழில்), குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப் பிக்க வேண்டும். மேலும் இந்த நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு  செய்து நலத்திட்ட உதவிகள் பெற மாவட்ட ஆட்சியரகத்தி லுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையி னர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

பெருமாளகரம் கிராமத்தில்  இலவச முழு உடல் பரிசோதனை

திருத்துறைப்பூண்டி, ஜூன் 23- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா, கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாள கரம் பஞ்சாயத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்  நடைபெற்றது.  முகாமை பெருமாளகரம் ஊராட்சி மன்றத்தோடு இணைந்து, சிவா மெடிக்கல் லேப், தெற்கு அலபாமா பல்கலைக்கழகம் (அமெரிக்கா), திருத்துறைப்பூண்டி-ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல், திருவாரூர் மெடிக்கல் சென்டர், அகர்வால் கண் மருத்துவமனை ஆகியோர் நடத்தினர். முகாமை ஊராட்சி மன்றத் தலைவர் பானுப் பிரியா பாலாஜி தொடங்கி வைத்தார். அலபாமா தெற்கு  பல்கலைக்கழக பேராசிரியர் மருத்துவர் நான்சி ரைஸ் தலைமை வகித்தார். முகாமில் உடல் நிறை குறியீட்டு எண், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின், ரத்த கொதிப்பு, சிறுநீர் தொற்று பரிசோதனை, கண் பரிசோதனை, காது  பரிசோதனை, பிசியோதெரபி, இசிஜி போன்ற முழு  உடல் பரிசோதனைகள் நடைபெற்றன. 660 பயனாளிகள் கலந்து கொண்டனர். அனைத்து பயனாளிகளுக்கும் மருந்து, மாத்திரை,  கண் கண்ணாடி போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன.

ஊராட்சி மன்றத்  தலைவர்களுடன் ஆலோசனை

அறந்தாங்கி, ஜூன் 23- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் தலைமையில், அனைத்து விரிவான திட்டங் கள் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் செயற்பொறியாளர் பரமசிவம், உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் குமாரவேலன், பார்த்திபன் மற்றும் உதவி பொறி யாளர் ரபீக் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.  பிஎம்ஏஒய் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் அனை வருக்கும் வீடு வழங்கும் திட்டம், பழுதான வீடுகள், ஜெஜெஎம் திட்டம், குடிநீர் பணிகள் தொடர்பான ஆய்வு கள் விரிவாக மேற்கொள்ளப்பட்டன. இதில் அனைத்து  ஊராட்சி மன்றத் தலைவர்களும் பங்கேற்று ஆலோசனை  பெற்றனர்.

உட்கோட்டை அபராத ரட்சகர் கோவிலை புனரமைக்க கோரிக்கை

அரியலூர், ஜூன் 23 - சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது ஜெயங் கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் பேசினார். அப்போது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்ட மன்றத்திற்கு உட்பட்ட உட்கோட்டை கிராமத்தில் உள்ள  பழமை வாய்ந்த அபராத ரட்சகர் கோவிலை தொன்மை யும், பழமையும் மாறாமல் புனரமைத்து குடமுழுக்கு செய்வதற்கு கோரிக்கை விடுத்து பேசினார்.  அதற்கு பதில் அளித்த, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “தமிழகம் முழுவதும் உள்ள  மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷமாக உள்ள  பழமை வாய்ந்த  517 கோவில்களுக்கும் தமிழக முதல்வர்  ரூ.300 கோடி நிதி ஒதுக்கிப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. அதில் எம்.எல்.ஏ. கூறிய அபராத ரட்சகர் கோவி லும் அடங்கும். விரைவில் அந்த கோவில் புனரமைக்கப் பட்டு, குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.  அவருக்கு எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார். இதே போல் ஜெயங்கொண்டத்திற்கு சந்தை மேம்பாடு செய்யும்  பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும் நன்றி தெரிவித்தார்.

பாலித்தீன் பைகள் பயன்பாட்டை  குறைக்க தீவிர பிரச்சாரம் அறிவியல் இயக்கம் முடிவு

புதுக்கோட்டை, ஜூன் 23- பாலித்தீன் பைகள் பயன்பாட்டை குறைக்க தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானித் துள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டம்  புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.முத்துக் குமார் தலைமையில் சனிக்கிழமை நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.வீர முத்து, பொருளாளர் டி.விமலா அறிக்கை களை முன்வைத்தனர்.  ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 வரை மாவட்ட  ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவை சிறப்பாக நடத்துவது. இதுகுறித்து  மாவட்டத்தில் உள்ள கலை, இலக்கிய, அறி வியல், கல்வி ஆர்வலர்களை ஒருங்கி ணைத்து அனைத்து ஒன்றியங்களிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது.  பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள்  பயன்பெறும் வகையில் இரவு நேரங்களில் வானியல் தொலைநோக்கியைக் கொண்டு சிறப்பு வான் நோக்குதல் நிகழ்வை தொடர்ந்து  நடத்துவது. இல்லம் தேடி கல்வி மையங் களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாலை நேர சிறப்பு பயிற்சி மையங்களாக தொடர்ந்து செயல்பட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மாவட்டம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பாலித்தீன் பைகள் பயன்பாட்டை  குறைக்கும் விதத்தில் விழிப்பு ணர்வு பிரச்சார பணிகளை மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பி னர் அ.மணவாளன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் க.சதாசிவம் உள்ளிட் டோர் பங்கேற்றனர். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் பிச்சைமுத்து வரவேற்க,  மாவட்ட இணைச் செயலாளர் ஜெரினா பேகம் நன்றி கூறினார்.