districts

img

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

மயிலாடுதுறை, ஆக.29 - டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி செவ்வாயன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். முகாமில், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை  தேவைப்படுவோருக்கு மருத்துவர்கள் மூலம் மருத்துவ மதிப்பீடு செய்து அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், கண்பார்வை பரிசோதனை, உதவி உபகரணங்கள் தேவைப்படு வோருக்கு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மாற்றுத்திறனா ளிகள் நலத்துறை சார்பில் 12 பய னாளிகளுக்கு வங்கிக் கடன் மானிய மாக தலா ரூ.25,000 வீதம் காசோலை  மற்றும் 2 பேருக்கு மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.