districts

img

மயிலாடுதுறை நகராட்சி 29 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் த.ராயர் வாக்குச் சேகரிப்பு

மயிலாடுதுறை, பிப்.12 - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை நகராட்சி 29 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்காக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் த.ராயர் வார்டுக்குட்பட்ட பனங்காட்டுத்தெரு, பனந்தோப்புத்துறை, சந்தைத்தோப்புத் தெரு, ஆலம்துறையப்பர் ஆலய சன்னதித்தெரு, பெருமாள்கோயில் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் தலைமையில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ‘பெருமாள் கோயில் குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் தங்களுக்கு இதுவரை பட்டா இல்லையென்றும், ஏற்கனவே போராடி வருகிற நீங்கள் மீண்டும் போராட்டங்களை நடத்தி எங்களுக்கு பட்டாக்களை வாங்கி தாருங்கள்’ என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதேபோன்று 29 ஆவது வார்டு முழுவதும் முறையான சாலை வசதிகள் இல்லை. வீட்டு வாசல்களிலேயே சாக்கடைக் கழிவுநீர் செல்வதாகவும் மக்கள் முறையிட்டனர்.  ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, நகரச் செயலாளர் துரைக்கண்ணு,மூத்த உறுப்பினர்கள் டி.கணேசன், வ.பழனிவேலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.மேகநாதன், அறிவழகன், விவசாயத் தொழிலாளர் சங்க அ.ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.