districts

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாதர், வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக்.15 - உரிமைக்காக போராடும் சாம்சங்  தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் அமல்படுத்த கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ், மாதர்  சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பவானி, மாணவர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பா.விக்கி  ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பி.கோமதி, வாலிபர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன், மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.லெ.சுக தேவ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இந்நிகழ்வில் மூன்று அமைப்புகளின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஆர்.மகாதீர் தலைமை வகித் தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாதர்  சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, பொருளாளர் ஜெ. வைகைராணி, மாணவர் சங்க மாநில  செயற்குழு உறுப்பினர் ஆர்.கார்த்தி காதேவி, வாலிபர் சங்க நகரச் செய லாளர் ஆர்.தீபக் மற்றும் நிர்வாகி கள் பேசினர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை எல்ஐசி கிளை அலுவல கத்தில், காப்பீட்டுக் கழக ஊழியர்கள்  சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  காப்பீட்டுக் கழகத்தின் கிளை செயலாளர் பி.இளையராஜா துவக்கி  வைத்தார். காப்பீட்டுக் கழக கிளைத்  தலைவர் வி.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். லியாபி முகவர்  சங்க கோட்டத்தில் தலைவர் பெரு மாள், லிகாய் முகவர் சங்கத்தின்  கிளை செயலாளர் பஞ்சாட்சரம், ஆர். சிவக்குமார், டி.காமராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பி.தியாக ராஜன் நன்றி கூறினார்.