திருவாரூர், பிப்.24 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம், புதுதேவங்குடி சிவன்கோ வில் தெருவில் வசித்த மறைந்த தோழர் உத்திராபதியின் துணைவியாரும், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினரும், மாதர் சங்க ஒன்றியச் செயலாளருமான உ.தேனம்மாள் வயது மூப்பு காரண மாக வெள்ளியன்று காலமானார். அவ ருக்கு வயது 75. தோழர் தேனம்மாள், நெருக்கடி காலங்களில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். கூலி தொடர்பான போராட் டங்களில் தலைமை ஏற்று, அந்தப் பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று கட்சி மற்றும் மாதர் சங்க பணிகளை திறம்பட செய்தவர். அவரது மறைவு செய்தி அறிந்து, அவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மறைந்த தேனம்மாள் உட லுக்கு அஞ்சலி செலுத்தினார். நீடா மங்கலம் ஒன்றியச் செயலாளர் டி.ஜான் கென்னடி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.எஸ்.கலியபெருமாள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.