கரூர், செப்.17 - தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் புகளூர் சமுதா யக் கூடத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு புகளூர் நகராட்சி யின் 22 ஆவது வார்டு கவுன்சிலர் இந்துமதி அரவிந்த் தலைமை வகித்தார். காப்பீட்டுக் கழக அகில இந்திய இணைச் செயலாளர் கிரிஜா, “பெண் விடுதலையும், கடந்து வந்த பாதையும், கடக்க வேண்டிய தூரமும்” என்ற தலைப்பில் பேசினார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் சசிகலா, மாவட்டச் செயலாளர் சுமதி ஆகியோர் கூட்டத் தில் பேசினர். சென்னை அயனாவரத்தில் சிஐ டியு நடத்தி வருகிற நிர்மல் பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ.4,200-ஐ சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். குழந்தைகளின் பரதநாட்டியம், யோகா, பேச்சு மற்றும் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.