districts

img

ஆதீன மட நிலத்தை பெண்ணிடம் விற்று பணமோசடி: பேரளம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் வீட்டின் முன்பு மாதர் சங்கம் போராட்டம்

திருவாரூர்,ஜன.11-  திருவாரூர் மாவட்டம், பேரளம் பேரூராட்சி முன்னாள்  கவுன்சிலர் கண்ணன். இவர் ரேணுகா தேவி என்ற பெண்ணிடம் இடம் வாங்கித் தருவதாக கூறி ஆதீனம் மடத்துக்கு சொந்தமான இடத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து 2019 ஆம் ஆண்டில் எட்டு லட்சம் ரூபாய் என விலை பேசி விற்பனை செய்துள்ளார். விற்பனை செய்த இடத்தை முறையாக பத்திர பதிவு செய்து தர வேண்டி ரேணுகாதேவி நீண்ட நாட் களாக வலியுறுத்தி  வந்துள்ளார்.ஆனால் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கண்ணன் தட்டிக் கழித்தார்.  இந்த நிலையில் மோசடி நபர் கண்ணனிடம் வாங்கிய இடம்  மடத்தின் நிர்வாகம் சார்பாக வாழ்க வளமுடன் என்ற அமைப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரேணுகாதேவி பேரளம் காவல்துறையில் புகார் அளித்துள் ளார். புகார் அளித்து எந்தவித நட வடிக்கை இல்லாததால் கடந்த 7-12-2023. அன்று திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார்  அளித் துள்ளார். மாவட்ட கண்காணிப்பாளி டம் புகார் அளித்தும் மேல் நட வடிக்கையும் இல்லை. இதனை யடுத்து  ஜனநாயக மாதர் சங்கத் திடம் முறையிட்டார்.   பாதிக்கப்பட்ட பெண்மணி ரேணுகாதேவிக்கு ஆதரவாக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் மோசடி நபர் கண்ணனின் வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இப்போராட்டத்திற்கு மாதர் சங்கத் தலைவர் பரிமளா தேவி,, செயலாளர் தனம் ஆகியோர் தலைமை வகித்தனார்.  போராட்டத்தை அறிந்து நேரில் வந்த நன்னிலம் டிஎஸ்பி போராட்டக் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். இதில் மோசடி நபர் கண்ணனை கைது செய்து பணத்தை மீட்டுத் தருவதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். இதன் அடிப்படை யில் முற்றுகை போராட்டம் தற்கா லிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.