districts

img

‘‘100 நாள் வேலை சம்பளப் பாக்கி” நாகை ஆட்சியரிடம் மாதர் சங்கம் மனு

நாகப்பட்டினம், பிப்.10- 100 நாள் வேலைக்கான சம்பளப் பாக்கி யை உடனடியாக வழங்க வேண்டும்.  வேலை யை ஆன்லைனில் பதிவு செய்வதைத் தடை செய்யவேண்டும். 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாகத் தொடங்க வேண்டுமென வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் பி.சுகந்தி, மாவட்டத் தலைவர் கே.டி.எம். சுஜாதா, மாவட்டச் செயலாளர் டி.லதா, மாவட்டப் பொருளாளர் எஸ்.சுபா தேவி,  சி.மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.