தஞ்சாவூர், அக்.17 - பெண்களுக்கும், மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் கொரட்டூர் டாஸ்மாக் கடையை மூட வலி யுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பேராவூரணி மற்றும் சேதுபாவா சத்திரம் ஒன்றியங்களின் சார்பில், தஞ்சா வூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கொரட்டூர் பேருந்து நிறுத்தம் அருகில் வியா ழக்கிழமை காத்திருப்பு போராட்டம் துவங்கி யது. போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.வசந்தி தலைமை வகித்தார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், தென்னை விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா, சேதுபாவாசத்திரம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார், மாதர் சங்கம் ஏ.மேனகா, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிராமப் பொதுமக்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பட்டுக்கோட்டை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், பேரா வூரணி வட்டாட்சியர் இரா.தெய்வானை, டாஸ்மாக் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தில் ஒப்புக்கொண்டவாறு, இதுவரை மதுக்கடை மூடப்படவில்லை. விவசாய விளைநிலங்க ளில் காலி மது பாட்டில்களை உடைத்து போட்டுச் செல்வதால் பெண்கள் வயலில் இறங்கி நடக்க முடியாத நிலை உள்ளது. விவசாய பூமியை பாழாக்கும் மதுக் கடையை இழுத்து மூட வேண்டும்” என வலி யுறுத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் காலை 10.30 மணிக்கு தொடங்கிய காத்தி ருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அங்கேயே சமையல் செய்து, சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.