புதுக்கோட்டை, ஆக.6 -
பாஜக ஆளும் மணிப்பூரில் நடை பெற்று வரும் இனக் கலவரத்தையும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடு மைகளையும் கண்டித்து புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க ஒன்றியத் தலைவர்கள் கே.சுதா, எஸ்.அன்புக்கரசி ஆகியோர் தலைமை வகித்தனர். இரண்டு சங்கங்களின் ஒன்றியச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ கண்டன உரையாற்றினார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மகா தீர், விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ராமையன், விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி, சிஐடியு நிர்வாகி கே.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பேசி னர்.