மயிலாடுதுறை, ஜன.21 - மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் சோழீஸ்வரர் கோயி லுக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் பலர் பல தலைமுறை களாக குடியிருந்தும், சிறு வணிகம் செய்தும் வருகின்றனர். இந்துசமய அறநிலையத்துறை யின் சார்பாக நியாய வாடகை சட்டம் என்ற பெயரில் ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தி வந்த பகுதி தொகையை, மாத வாடகையாக மாற்றம் செய்து வாடகையை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். மேலும், இவற்றை நிலுவைத் தொகை என்ற பெயரில் பல லட்சங்கள் கணக்கிட்டு உடனே செலுத்த வேண்டும் எனவும், செலுத்த தவறினால் வாடகை உரிம ஒப்பந்தத்தை மீறியதற்காக இந்து சமய அறநிலையத்துறை சட்ட பிரிவு 22/1959 இல் 78, 79A, 80-இன்படி ஆக்கிரமிப்பாளர்களாக கருதி உடனடியாக வெளியேற்றப் படுவீர்கள் என்று இந்துசமய அற நிலையத் துறையினர் அச்சுறுத்தி மிரட்டுகின்றனர். பல தலைமுறைகளாக இருந்து வரும் பயனாளிகளை ஆக்கிரமிப்பா ளர்கள் என்று அச்சுறுத்துவது இயற்கை நீதிகளுக்கு புறம்பான செயல். பயனாளிகளின் அனுபவத்தி லுள்ள அடிமனைகளை முறையாக அளக்காமல், அடிமனைக்கான வாடகையை நிர்ணயிப்பதற்கு பதி லாக மனைகளின் சந்தை விற்பனை மதிப்பீட்டின்படி சட்டத்திற்குப் புறம்பாக கணக்கீடு செய்து வாட கையை வசூலித்து வருகின்றனர். அரசு கணக்கில் உள்ள நத்தம் சாரி மனைகளை கோயிலுக்குச் சொந்த மான இடங்கள் என சொல்லி அநியாயமாக மிரட்டி வாடகை வசூல் செய்வது வன்மையான கண்டனத் திற்குரியது. நத்தம் சாரி மனைகளை அனுபவத்திலுள்ள பயனாளி களுக்கு அரசு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் த.ராயர் தலைமையில் பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு குத்தாலம் வர்த்தகர்கள் சங்க பேரமைப்பு மற்றும் குத்தாலம் வணிகர்கள் சங்க பேரவையினரும் ஆதரவு தெரி வித்தனர். இதில் 400-க்கும் மேற்பட்ட பெரிய, சிறு, குறு கடை களை முழுமையாக அடைத்து போ ராட்டத்தில் கலந்து கொண்டனர். மாநிலத் தலைவர் வ.செல்வம், மாநில பொருளாளர் எஸ்.துரைராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய், விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் டி.சிம்சன், மாநிலக் குழு உறுப்பி னர் பி.குணசுந்தரி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.