கரூர், ஜூலை 23-
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் குக்கி பழங்குடி யினத்தைச் சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சி, நாடு முழு வதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன் முறைகளை கட்டுப்படுத்த வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை களை தடுத்து நிறுத்த வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு கடுமை யான தண்டனை வழங்க வேண்டும்.
கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய அம்மாநில முதல்வர் பைரேன் சிங் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட வெகுஜன அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் கரூர் மாநகரக் குழு சார்பில், கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கரூர் மாநகர செயலாளர் எம்.தண்ட பாணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு சிறப்புரை யாற்றினார். மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு, மாநகர குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சை ரயிலடியில் மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலி பர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் ஆம்பல் துரை.ஏசு ராஜா தலைமை வகித்தனர். மாணவர் சங்க மாவட்ட செய லாளர் கே.சந்துரு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை செயலாளர் கே.அபிமன்னன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் என்.சிவகுரு, மாநிலக் குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே. அருளரசன், தீஒமு மாவட்டப் பொருளா ளர் பி.சத்யநாராயணன், சிபிஎம் மாநகரச் செயலாளர் வடிவேலன், மாநகரக் குழு உறுப்பினர் கரிகாலன் மற்றும் முற் போக்கு அரங்கத்தினர் கலந்து கொண்ட னர். பேராவூரணி அண்ணா சிலை அருகே தன்னார்வலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத் திற்கு மகேந்திரன் தலைமை வகித்தார். 25-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
வாலிபர் சங்கம் சார்பில் ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண் டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அய்யப் பன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பெர்னாட்ஷா, விவசாயிகள் சங்கம் ஏ.வெங்கடேசன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கோவிந்த ராஜ், நகரச் செயலாளர் வசந்தகுமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், பூதலூர் நான்கு ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கம் வசந்தா தலைமை வகித்தார்.
கறம்பக்குடி
வாலிபர், மாதர் சங்கத்தினர் புதுக் கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சனிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் தினேஷ் தலைமை வகித்தார். மாதர் சங்க ஒன்றி யச் செயலாளர் எம்.நித்யா முன்னிலை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் ஆ.குமாரவேல், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.வீரமுத்து உள்ளிட்டோர் உரையாற்றினர்.
பொன்னமராவதி
மாதர் மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாதர் சங்க ஒன்றியச் செயலா ளர் மதியரசி தலைமை வகித்தார். ஆர்ப்பாத் டத்தை விளக்கி வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மகாதீர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக் குழு உறுப்பி னர் நல்லதம்பி, வாலிபர் சங்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் குமார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் ஆகி யோர் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ராமசாமி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேதாரண்யம் தெற்கு ஒன்றியம் சார்பில் வேதாரண்யம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.லதா, வேதாரண்யம் தெற்கு ஒன்றியச் செய லாளர் வி.அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாகை வடக்கு ஒன்றியம் சார்பில் சிக்கல் கடைத்தெரு வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும், தலைஞாயிறு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தலை ஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து ஆகி யோரும் உரையாற்றினர்.
கும்பகோணம், ஜூலை 23-
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், கலவ ரத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பொறுப் பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி யும் வாலிபர் சங்கத்தின் கும்பகோணம் நகரக் குழு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் சேவையில் செயல்பட்டு வரும் வாலிபர் சங்கத்தை அவமதிக் கும் வகையில், வீடியோ மற்றும் அவதூறு செய்திகளை கும்பகோணம் பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டு கிளப்பி வருகின்றனர். இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி புகார் மனு கொடுக்கப் பட்டது.
அந்த புகார் மனுவில், “இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து ரத்த தானம் செய்வது, போதைக்கு எதிரான பல ஆக்கப்பூர்வ செயல் பாடுகள் மூலம் மக்கள் பணியில் ஈடுபடும் அமைப்பாகும். இந்நிலையில் மணிப்பூர் சம்பவம் உலக அரங்கில், நம் நாட்டிற்கே மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி யுள்ளது. இக்கொடூரத்தை நிகழ்த்திய கயவர் களை கைது செய்ய வலியுறுத்தியும், மக்களை காக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும், கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் முற்போக்கு இயக்கங் கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என தெரிவித்து சுவரொட்டி ஒட்டப்பட்டி ருந்தது.
இந்த கொடூர சம்பவத்தை திசை திருப்பும் விதமாக, பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார், பாஜக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சுரேஷ்குமார், பாஜக நிர்வாகிகள் வேதா, வசந்தி, வாசு மற்றும் பெயர் தெரியாத, அடையாளம் தெரிந்த 2 பேர், மக்கள் பணியாற்றி வரும் வாலிபர் சங்கத்தினரை, “பாரத மாதாவை இழிவு படுத்தி விட்டனர் என்றும் வாலிபர் சங்க அமைப்பை சமூக விரோத கும்பல்” என்றும் குறிப்பிட்டு, ஜனநாயக அமைப்புகளை அச்சு றுத்து வகையில் அவதூறு வீடியோ வெளி யிட்டுள்ளனர்.
வாலிபர் சங்கம் சார்பில் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள், எந்த விதத்திலும் யாரையும் புண்படுத்தாமல், மணிப்பூர் சம்பவத்தை கண் டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தப் பட்டிருந்தன.
ஆனால் இல்லாத ஒரு செய்தியை இருப்பதாக பொய்ப் பிரச்சாரம் செய்து, அமைதி யாக இருக்கக் கூடிய கும்பகோணம் பகுதியில் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும், நற்பெயர் கொண்ட எங்கள் அமைப்பின் மீது களங்கத்தை ஏற்படுத்திய மேற்படி பாஜகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் போது, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர் ராமன், மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கலைச்செல்வி, தொழிலாளர் சங்க பிரதிநிதி கள் பார்த்தசாரதி, செந்தில்குமார், செல்வம், மாணவர் சங்க பிரதீப் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.