கும்பகோணம், நவ.29 - தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் ஒன்றியம் கொத்தங் குடி ஊராட்சியில் 1989-90- களில் சுமார் 35 ஆண்டு களுக்கு முன்பு கொத்தங்குடி ஆதிதிராவிடர் தெருவில் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது பெய்த கனமழையால் அவை பாதிக்கப் பட்டதில், சுமார் 100-க்கும் மேற் பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. மழை யால் வீடு இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் கொத்தங்குடி ஊராட்சி சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினர். அப்போது கட்சித் தலைவர்களிடம், “அப்பகுதி பொதுமக்கள் பழைய சேதமான வீடுகளை இடித்துவிட்டு, புதிய தரமான வீடுகள் கட்டித் தர ஏற்பாடு செய்து தாருங்கள்” என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் தெரிவிக்கை யில், “கும்பகோணம் ஒன்றியம் கொத்தங்குடி ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 90-க்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது மழையால் பாதிக்கப்பட்டு, மக்கள் குடியிருக்க முடியாமல் மிகவும் தவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அன்றாட விவசாய கூலித் தொழிலாளர்கள். பாதிக்கப்பட்ட மக்கள், ‘எங்களுக்கு சாப்பாடு கூட வேண்டாம். இருக்க புதிய வீடு கட்ட ஏற்பாடு செய்து தாருங்கள்’ என்று கேட்டனர். அதன்படி, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து உடன டியாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு கட்டித் தரவும் தமிழக முதல்வர் கவனத்திற்கு சிபிஎம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு விரைவில் வீடு கட்ட ஏற்பாடு செய்யப்படும் என ஆறுதல் தெரிவித்தோம்” என்றார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், ஒன்றியச் செயலாளர் கணேசன், மாவட்டக் குழு உறுப்பினர் நாக ராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுதாகர், கிளைச் செயலாளர் ஐயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.