இராமநாதபுரம், மார்ச் 17- இராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானை தாலுகா தொண்டி பகுதியில் கோடி வயல் பின்புறம் உள்ள தொண்டி காலனியை சேர்ந்த சின்ன முத்து தொண்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் துப்புரவு பணி யாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், மார்ச் 9 அன்று பேரூ ராட்சியில் பணியாற்றும் தொண்டி சத்திரம் தெருவை சேர்ந்த இருளன் மகன் குருசாமி என்பவர் சின்ன முத்துவின் மனைவி பூமா ரிக்கு போன் செய்து வேலை செய்யும் போது உனது கணவர் மயங்கி விழுந்து விட்டார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த மனைவி பூமாரி, தனது மகளுடன் சென்று போது, சின்ன முத்து இறந்து கிடந்துள்ளார். அவர் மலக் குழிக்குள் இறங்கியதால் தான் மரணம் அடைந்தார் என்பதை மறைத்து விட்டு மயங்கி விழுந்து இறந்தார் என உண் மைக்கு மாறான தகவலை தெரிவித்துள்ள னர். மேலும் தகவல் அறிந்து வந்த அவரது மனைவியிடம் எப்படி இறந்தார் என எவரும் விவரம் சொல்லவில்லை. எனவே தனது கணவர் எப்படி இறந்தார் என விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்று பூமாரி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நா.கலையரசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துராமு, தாலுகா செய லாளர் கே.ஜெயகாந்தன், விவசாயத் தொழி லாளர்கள் சங்க தாலுகா பொருளாளர் ஏ.நாக நாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சேதுராமன் உள்ளிட்டோர் சின்னமுத்துவின் மனைவி பூமாரி மகன் காளீஸ்வரன் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இருளன் மகன் குருசாமி என்பவர் தான் தொண்டி கே.எஸ்.கே மஹால் உரிமையாளரின் அப்பார்ட்மெண்டில் உள்ள செப்டி டேங்கை சுத்தம் செய்ய சின்னமுத்து மற்றும் கமுதி பகுதியைச் சேர்ந்தவரும் தொண்டி பகுதி யில் கூலி வேலை செய்து வருபவருமான பொன்மாரி ஆகியோரை அழைத்துச் சென்றுள்ளார். சின்னமுத்துவை செப்டிடேங்கில் இறக்கிவிட்டு அடைப்பை எடுத்துவிட சொல்லி இருக்கிறார்கள். அந்த அடிப்படை யில் செப்டி டேங்கில் இறங்கிய போது தான் மலக்குழிக்குள் விஷ வாயு தாக்கி சின்ன முத்து இறந்துள்ளார். இதை திட்டமிட்டே மறைத்துள்ளனர். மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்க தடை விதித்து சட்டம் உள்ள போது, அந்த சட்டத்தை மீறி செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய மனிதர்களை அழைத்துச் சென்று மலக் குழிக்கும் இறங்க வைத்து, சின்ன முத்து வின் இறப்பிற்கு காரணமான அப்பார்ட்மெண்ட் உரிமையாளர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தி னர்.