districts

img

மகேந்திரன் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றுக!

அஞ்செட்டி, ஜூலை 2 தேவன்தொட்டியை சேர்ந்த 17 வயது மகேந்திரனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை என நாடகமாடும் குற்ற வாளிகளை கைது செய்துக்கோரி யும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  அஞ்செட்டி வட்டம், தேவன்தொட்டியை சேர்ந்த படிப்பறிவில்லாத கணேசன் சாந்தா மகன் மகேந்திரன் (வயது17) மே8ஆம் தேதி காணாமல் போனார். மறுநாள் அவ ரது உடல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் காயங்களுடன்  மீட்கப்பட்டது.  கொலையில் சம்பந்தப்பட்ட மகன்களின் தந்தையான பசுவராஜ் மகேந்திரனின் பெற்றோரை மிரட்டி மகேந்திரனுக்கு காலில் காயம் ஏற்பட்டதனால் மனமுடைந்து அவனே நீர்த்தேக்க தொட்டிக்குள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக எழுதி வாங்கி காவல் துறையிடம் கொடுத்துள்ளார். தடயங்களை அழிப்பதற்காக உடனடியாக மகேந்திரன் உடலை எரிக்கச் செய்துள்ளனர். காவல்துறையினர் இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொள்ளாமல் மகேந்திரனின் தந்தையிடம் மிரட்டி வாக்குமூலம் பெற்று இந்த கொலையினை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தப்பிக்க விட்டுள்ளனர். மகேந்திரனின் உடற்கூறாய்வு செய்யப்பட்ட அறிக்கையிலும் தலையில் பின்பக்கத்தில் தாக்கப்பட்டு தலை சிதைந்துள்ளது, முதுகின் வலது புறம் பலமாக தாக்கப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது, தொடையில்,முட்டியில் எலும்பு முறிந்துள்ளது என கூறப் பட்டுள்ளது. ஆனாலும் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளரான பங்கஜம் உட்பட கொலையை மறைப்பதற்காக கொலை என்று வழக்கு பதிவு செய்யாமல் சந்தேக மரணம் என பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மகேந்திரனின் பெற்றோர்கள் சமீபமாக மார்க்சிஸ்ட் கட்சி அஞ்செட்டி வட்டக் குழுவிற்கு தெரியப்படுத்திய நிலையில் சிபிஎம் சார்பில் காவல்துறையில் பல முறை புகார் தெரிவித்தும் எந்த பதிலும் கூறாமல்  இழுத்தடித்து வந்துள்ளனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட   மகேந்திரன் குடும்பத்தினருக்கு நியாயம் கேட்டு அஞ்சட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த சிபிஎம் தயாரான நிலையில் மறுபுறம் காவல் துறையினர் மார்க்சிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அத்துடன் குற்றவாளிகளுக்கு ஆதர வாக செயல்பட்டு வரும் காவல்துறை அதிகாரிகள் தவறை மறைக்க முயற்சித்து வருகின்றனர். எனவே நீதி கேட்டு காவல் துறையின் சட்டவிரோத, கொலை யாளிகளுக்கு ஆதரவான செயல்களை கண்டித்தும், காவல்துறை அதிகாரி பங்கஜம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,இந்தக் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும்,அஞ்செட்டியில் சிபிஎம் வட்டக் குழு செயலாளர் தேவராஜன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர்கள் சேகர்,இருதயராஜ், பிரகாஷ் கண்டன உரையாற்றினர்.  தளி, கெலமங்கலம் ஒன்றிய குழு செயலாளர்கள் வெங்கடேஷ், ராஜா, வட்டக்குழு உறுப்பினர்கள் மாரப்பா,கிருஷ்ணன், குமரவடி வேல், தர்மலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.