ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.25- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூ ரில் தமிழ்நாடு மாநில ஓபன் கராத்தே போட்டி யை சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் துவக்கி வைத்தார். இந்த போட்டியில் மதுரை, தேனி, திண் டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, திரு நெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாத புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயி லும் மாணவ, மாணவிகள் உள்பட 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கும், பள்ளிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார். இதில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சி முருகன், இன்டர்நேஷனல் சோட் டாகன் கராத்தே தமிழ்நாடு குழுவினர், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.