மன்னார்குடி, நவ.7- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியர் முன்னிலையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி, உள்ளாட்சித் துறை என்.எம்.ஆர் ஊழியர்கள் சங்கம் மற்றும் சிஐடியு மன்னார்குடி நகராட்சி தனியார் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கடந்த மாதம் மன்னார்குடி நகராட்சி ஒப்பந்தத் தொழி லாளர்களின் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மன்னார்குடி நகராட்சி ஆணையர் நாராயணன் சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நகராட்சியில் நடை பெற்ற இப்பேச்சுவார்த்தையில், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்டத் தலைவர் எம்.கே.என்.ஹனிபா, மாவட்டப் பொருளாளர் ஜி. ரகுபதி, ஒப்பந்த தொழிலாளர் சங்க மதிப்புறு தலைவர் கே.எஸ்.சிவசுப்பிர மணியன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில், ரூ.5000 பண்டிகை முன்பணம், ஆயி ரம் ரூபாய் போனஸ் உள்ளிட்ட கோரிக் கைகள் ஏற்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் உறுதி இந்நிலையில், அக்டோபர் மாத சம்பளம் கொடுக்கப்படவில்லை. ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறை வேற்றுவதில் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்தது. இதனால், செவ்வாய்க்கிழமை மதிப்புறு தலைவர் கே.எஸ்.சிவசுப்பிரமணியன் தலைமை யில் நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற் றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.ஹனிபா, மாவட்டப் பொரு ளாளர் ஜி.ரகுபதி, உள்ளாட்சி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முரளி, சிஐடியு இணைப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் நகராட்சி ஆணையர் நாரா யணன் போராட்ட இடத்திற்கு நேரடியாக வந்து, ‘நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்குள் அவரவர் கணக்கில் தீபா வளி முன்பணமும், மாத ஊதியமும் வழங்கப்படும்’ என்று உறுதியளித்தார். அதன்பேரில் போராட்டம் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்பட்டது.