தஞ்சாவூர், ஆக.2- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் திருச்சிற்றம்பலத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கலைஞரின் கனவு இல்ல திட்டம் - பயனா ளிகளுக்கு புதிய வீடு கட்டும் பணி ஆணைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணைகளை வழங்கி, அரசின் திட்டங்கள் குறித்து சிறப்பு ரையாற்றினார். 198 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டு வதற்கும், 89 பயனாளிகளுக்கு வீடு பழுது நீக்கம் செய்வ தற்கான ஆணைகளும் வழங்கப்பட்டன. சேதுபாவாசத்திரம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மருங்கப்பள்ளம் பல்நோக்கு சேவை மையக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணைகளை வழங்கினார். இதில் 37 ஊராட்சி களைச் சேர்ந்த 200 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டு வதற்கான ஆணை வழங்கப்பட்டது.