தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மணலூர் அருள்மிகு மகா மாரியம்மன் மற்றும் அய்யனார் திருக்கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்களன்று நடைபெற்றது. தேரில் விசேஷ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் கோயில் நிர்வாகத்தினர், ஊராட்சித் தலைவர் பாண்டியன், ஒன்றியக் கவுன்சிலர் ஜீவிதா, முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெயந்தி உட்பட கிராம நாட்டாண்மைகள், பொது மக்கள் பங்கேற்றனர்.