அய்யூர் கிராம பேரவை
நாகப்பட்டினம், ஜூலை 21 - நாகப்பட்டினம் மாவட் டம் தலைஞாயிறு ஒன்றி யம் கொத்தங்குடி ஊராட்சி அய்யூர் கிராமத்தில் சிபிஎம் கிளை பேரவை நடைபெற்றது. நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.வேணு, தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.இராஜா உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர். ஆண்டுதோறும் நடை பெறும் பேரவையில், அனைத்து கட்சி கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் போட்டி
பாபநாசம், ஜூலை 21 - கலைஞர் கருணாநிதி யின் நூற்றாண்டை யொட்டி, தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை யினர் நல உரிமைப் பிரிவு மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பாபநாசத்தில் நடை பெற்ற கிரிக்கெட் போட்டி யில் 42 அணிகள் பங்கு பெற்றன. இதில் முதல் 4 இடங்களைப் பெற்ற அணி களுக்கு கோப்பை, பணப் பரிசு, 5 ஆவது இடம் பிடித்த அணிக்கு பணப் பரிசு வழங்கப்பட்டன. கிரிக் கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு, கோப்பை, பணப் பரிசை நாடாளுமன்ற மாநிலங்க ளவை உறுப்பினர் கல்யா ணசுந்தரம் வழங்கினார்.
புதிய மின் மாற்றிகள் அமைப்பு
பாபநாசம், ஜூலை 21- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த கபிஸ் தலம் ஊராட்சி, அக்கறை ப்பூண்டி கிராமத்தில், கீழத் தெரு மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் மின் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, 63 கேவி மின்மாற்றி ரூ.5.27 லட்சம் அமைக்கப்பட்டது. இதை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் அக்கறைப்பூண்டி பகுதியில் உள்ள 60 வீட்டு மின் இணைப்புகள், 1 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 1 விவசாய மின் இணைப்பு பயன்பெறும். இதேபோன்று அல வந்திபுரம் ஊராட்சியில் செந்தில்நாதன் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் பற்றாக் குறையை நிவர்த்தி செய் யும் பொருட்டு 63 கேவி மின்மாற்றி ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டது. இதனையும் ஜவா ஹிருல்லா எம்எல்ஏ இயக்கி வைத்தார். இதன் மூலம் அலவந்திபுரம் ஊராட்சி, செந்தில்நாதன் நகர் பகுதியில் 55 வீடுகள் பயன்பெறும்.
வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் மமக தலைவர் கோரிக்கை
பாபநாசம், ஜூலை 21- வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க ஒன்றிய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: அண்டை நாடான வங்கதேசத்தில் உள்நாட்டுப் பிரச்சனை காரணமாக மிகப்பெரிய அளவில் கலவரம் நடக்கிறது. இந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருப்ப தாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 8,500 மாணவர்கள் உட்பட 15,000 இந்தியர்கள் வங்கதேசத் தில் இருக்கின்றனர். இந்தியாவில் நீட் தேர்வு நெருக்கடி யால், வங்கதேசத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவம் படிக்க அங்கு சென்றிருப்பது தெரிய வருகிறது. வேலை செய்யும் மற்ற தமிழர்களும் பாது காப்பற்ற சூழலில் தவித்து வருகின்றனர். வங்கதேசத்தில் மருத்துவம் பயிலும் மாணவர்களையும், பணி செய்யும் நபர்களையும் பாதுகாப்பாக தமிழ்நாடு அழைத்து வருவதற்கு தமிழ்நாடு அரசு உரிய முன் முயற்சியை மேற் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசும் அதிதீவிர நடவடிக் கையை முன்னெடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி யின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜூலை 31-இல் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டம் கரூரிலிருந்து 2 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு
கரூர், ஜூலை 21 - சென்னையில் ஜூலை 31 ஆம் தேதி நடக்கும் முற்று கைப் போராட்டத்தில் கரூர் மாவட்டத்தில் இருந்து 2000 ஆசிரி யர்கள் பங்கேற்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொ டக்கக் கல்வித்துறையில் பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக் கூடிய அரசாணை எண்.243-ஐ ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். முடக்கப்பட்ட சரண்டரை மீண்டும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக் கைக் குழுவின் கரூர் மாவட்டம் சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது. கரூர் நடந்த மாநாட்டிற்கு கரூர் மாவட்ட டிட்டோஜேக் ஒருங்கிணைப்பாளர் ஆ.இருதயசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் பா. பெரியசாமி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநிலச் செயலாளர் ஜ.ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் வேலு மணி, அமுதன், தமிழ்ச்செல்வன், ரகுபதி, செல்வதுரை ஆகி யோர் போராட்டம் குறித்து பேசினர்.
ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.5 லட்சமாக உயர்த்த கோரிக்கை
கும்பகோணம், ஜூலை 21 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க திருவிடைமருதூர் 8 ஆவது வட்டப் பேரவை கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் நடைபெற்றது. பேரவையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ராஜகோபாலன் சங்கக் கொடியினை ஏற்றினார். திருவிடைமருதூர் வட்டத் தலைவர் கே.சிவராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நாக. நாகராஜன் வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். சங்க மாநிலச் செயலாளர் எம்.வி. செந்தமிழ்ச்செல்வன், தஞ்சை மாவட்ட தலைவர் ஆர். கலியமூர்த்தி ஆகியோர் நிறைவுரையாற்றினர். எஸ்.புதூர் என்.துரைராஜ் நன்றி தெரிவித்தார். ஓய்வூதியர்களுக்கு 70 வயது துவங்கியவுடன் கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்கிட வேண்டும். கம்யுடேசன் காலத்தை 15 ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ சிகிச்சை திட்டம் ஓய்வூதியர்களுக்கு அனைத்து வகையிலும் பயன்பெறும் வகையில், பிற மாநிலங்களில் உள்ளது போல் தமிழக அரசும் ஏற்று நடத்த வேண்டும். மருத்துவப் படி மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும். மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரயில்வே கட்டண சலுகை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மினி பேருந்து வழித்தடங்களை 16 கி.மீட்டராக அதிகரிக்க வேண்டும் மினி பேருந்து உரிமையாளர்கள் வேண்டுகோள்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 21- மினி பேருந்து உரிமையாளர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு ஞாயிறன்று திருச்சி பேருந்து நிறுத்தத்தில் நடந்தது. இதில் மினி பஸ் உரிமையாளர்கள் செந்தில், அசோக் ஆகியோர் கூறியதாவது: கலைஞர் கருணாநிதி அவர்களின் கனவு திட்டமான மினி பேருந்து திட்டம் கிராம மக்களின் நலன் கருதி செயல்படுத்தப் பட்டது. அந்தத் திட்டத்தை, மக்களின் நலன் கருதி விரிவுபடுத்த பரிசீலனை செய்வதாக தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளது. இதற்காக ஜூலை மாதம் 22 ஆம் தேதி மக்களின் கருத்துகளை கேட்க திட்டமிடப்பட்டது. ஆனால் அடிப்படையில், தற்போது உள்ள திட்டமானது தோல்வியை கண்டுள்ளது. இந்த தோல்விக்கான காரணத்தை அர சாங்கம் பரிசீலிக்க வேண்டும். இந்த திட்ட மானது தோல்வி அடைவதற்கு முதல் காரணம், இப்போது இயங்கி வரும் மினி பேருந்துகளுக்கு நகர பேருந்துகள் செல்லும் வழித்தடங்களில் 4 கிலோ மீட்டரும், நகரப் பேருந்துகள் செல்லாத வழித்தடங்களில் 16 கிலோ மீட்டரும் மட்டுமே பயணிக்க அனு மதிக்கப்பட்டது. 4 கிலோமீட்டர் மூலமாக மக்கள் அனை வரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு முழுமையாக சென்று பயனடைய முடிய வில்லை. ஏனெனில் தற்போது இயங்கிக் கொண் டிருக்கும் பெரும்பாலான மினி பேருந்து கள், பேருந்து நிலையத்தை அடையாமல் பாதியில் நின்று விடுகின்றன. இதனால் மக்கள் தங்களுடைய அனைத்து தேவைகளையும் முழுமையாக பெற முடியவில்லை. இத்திட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், இப்பொழுது அரசால் வழங்கப்பட்ட மினி பேருந்து வழித்தடத்தில் 4 கிலோ மீட்டரை 16 கிலோ மீட்டர் என உயர்த்த வேண்டும். இதன்மூலம் இந்த திட்டமானது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் பயனளிப்ப தாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜூலை 26 தஞ்சையில் ஜியோ ரிலையன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சாவூர், ஜூலை 21- தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக, சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை.26 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் ஜியோ ரிலையன்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு, ஹோம் சேல்ஸ் ஆபிசர், ஜியோ பாய்ண்ட் மேலாளர், உதவி மேலாளர், விற்பனை அலுவலர், டிஜிட்டல் ரிப்பேர் ஸ்பெஷலிஸ்ட், ஜியோ பைஃபர் பொறியாளர், டெக்னீசியன் போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு 4000-க்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேற்கண்ட காலியிடங்களுக்கு 18 முதல் 45 வரை வயதுடைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 10-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரி கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04362- 237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்து உள்ளார்.
மருதுபாண்டியர் கல்லூரியில் முதல் ஆண்டு வகுப்பு தொடக்க விழா
தஞ்சாவூர், ஜூலை 21- தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில், வெள்ளிக் கிழமை இளங்கலை முதலாமாண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்துப் பேசி னார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி யின் முதல்வர் ப.சுப்பிரமணியன், ஆராய்ச்சி புலத்தலைவர் கோ.அர்ச்சுணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் எஸ்.பாபாஜி ராஜா போன்ஸ்லே, இலங்கை வவுனியா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் தம்போ. மங்களேஸ்வரன் ஆகி யோர் பங்கேற்று பேசினர். முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் இரா.தங்கராஜ் வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் வீ.வெற்றிவேல் நன்றி கூறினார்.