districts

பருத்தி விலை சரிவைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாபநாசம், ஆக.24 - பருத்தி விலை சரிவைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள்  கட்சித் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ. வுமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப் பியுள்ளார். தரம் உயர்த்த நடவடிக்கை நடப்பு 2024 ஆம் ஆண்டு பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண் டால் ஒன்றுக்கு ரூ.7020 என ஒன்றிய அரசால்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படை யில் பருத்தியின் குறைந்தபட்ச சராசரி தர  அளவானது (Fare Average Quality) குறைந்த நீள இழை பருத்திக்கு 7.0 முதல்  8.0 மைக்ரான் அளவிற்குள் இருக்க வேண்டு மென்றும், அதிக நீண்ட இழை பருத்தி இழைக்கு 4.0 முதல் 4.8 மைக்ரான் அளவிற் குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங் களில், பருவநிலை மாறுபாடு மற்றும் மழையின் காரணமாக கடந்த 10 ஆண்டு களாக பருத்தியின் சராசரி தரமானது படிப்படி யாக குறைந்து காணப்படுகிறது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பெருகிட  பருத்தியின் தரத்தை உயர்த்தும் வழிவகை களை கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று  கேட்டுக் கொள்கிறேன்.  பருத்தி கொண்டு செல்லும் செலவை ஏற்க... கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய பருத்திக் கழகத்தினர், தங்கள் அளவிலேயே போக்குவரத்து செலவினங்களை ஏற்றுக் கொண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தியை கொள்முதல் செய் துள்ளனர். அதைப் போலவே எதிர்வரும் காலங்களிலும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஒழுங்குமுறை விற்ப னைக் கூடங்களில் கொள்முதல் செய்யப் படும் பருத்தியை பஞ்சாலைகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செல வினத்தை இந்திய பருத்தி கழகத்தினர் ஏற்றுக்  கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள  வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.