districts

img

செங்கொடி உயர்த்துவோம்...! விவசாயம் காப்போம்...!

இந்திய நாட்டின் முது கெலும்பான விவசாயிகள் வாழ்வில் பெரும் மாற்றங்கள்  ஏற்பட்டுள்ளன. இந்திய நாடு முழுவதும் விவசாயம் சார்ந்தது. உலகில் எங்கும் விளையாத முந்திரி, ஏலம், கிராம்பு, மிளகு ஆகிய நறு மணப் பொருட்கள் விளை யும் நம் தேசம், அதிலும் குறிப் பாக தமிழகம் மிகச் சிறப்பு வாய்ந்த சமவெளிப் பகுதி.  நவதானியப் பயிர்கள் இங்கு நவதானியங்கள் என்று சொல்லும் தினை, கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற  தானியங்களை மானாவாரி மற்றும் இறைவைப் பயிர்களாக விளைவிப்பது ஒருபுறம் இருக்க, காவிரி நீர்ப்பாசனம் மறுபுறம் சிறப்பாக அமைந் துள்ளது. மேட்டூர் அணை ஜூன் 12 இல் திறக்கப்படும் போது, தஞ்சை மாவட்ட விவசாயிகள் சாகுபடி பணிகளுக்குத் தயாராவார்கள். தமிழகத்தில் பருவகால மழையும் விவசாயிகளுக்குச் சாதக மாக அமையும். இந்நிலையில் விவசாய வேலை  பத்து மாதங்கள் தொடர்ந்து நடைபெறும். விவ சாயத் தொழிலாளர்களின் வாழ்வு செழிப்படையும். விவசாயப் பணிகள் நாற்றங்கால் அமைப்ப தில் தொடங்கி, உழவு, வரப்பு வெட்டுதல், நாற்றுப்  பறித்தல் என பல நிலைகளைக் கொண்டது. ஆண்கள் மட்டுமே செய்யும் பணிகளும், ஆண்க ளும் பெண்களும் இணைந்து செய்யும் பணி களும் உண்டு. நடவு வேலையின்போது காடு  கழனிகளில் நாணல் பூ தலைப்பாகை, முண்டாசு  காட்சியளிக்கும். குலவைப் பாடல்களின் சிறப்பு நடவு வேலை தளத்தில் விவசாயத் தொழிலா ளர்கள் பாடும் குலவைப் பாட்டு காடு கழனியில் ஓங்காரமாக ஒலிக்கும். இப்பாடல்கள் பசி மறக்கச் செய்து, வாழ்க்கை நிலையை யோசிக்கத்  தூண்டும். பாடல்களைப் பாராட்டி விவசாயிகள் கூடுதல் ஊதியம் வழங்குவார்கள். அறுவடைக் காலம் நெருங்கும்போது தொழிலாளர்கள் கதிர் அறுக்கும் கருக்கரி வாளுக்குக் கருக்கு வைக்க கொல்லுப்பட்ட றைக்குக் கூட்டம் கூட்டமாகச் செல்வார்கள். தை மாதம் அறுவடை துவங்கும். காலை கதிரவன் உதயமாகும் முன் அறுவடை  வேலைக்குச் செல்வோர், அன்று இரவும் மறு நாள் பொழுதுக்குமான உணவை முன்கூட்டியே சமைப்பர். மிச்சமிருந்த பழைய சாதத்தை வாளி களில் எடுத்துச் செல்வர். காலை அறுவடை முடிந்ததும் ஏரி வாய்க்கால்களில் கை, கால் கழுவி, கூட்டமாக அமர்ந்து உணவருந்தும் காட்சி இன்று காணாமல் போய்விட்டது. முதல் நாள் அறுவடைக்கு நெல் கதிரைக் கட்ட  வைக்கோலால் பிரி ‘ஆக்கை’ திரிப்பர். இயந்திரத்தில் தயாரிக்கும் தேங்காய் நார்க் கயிறு போல் அல்லாமல், கையால் திரித்த ஆக்கை  எவ்வளவு இறுக்கினாலும் அறுந்து போகாது -  இது தொழிலாளர்களின் கைவந்த கலை. களத்து மேட்டு வேலைகள் நெல் கதிரைக் கட்டி களத்து மேட்டில் அடிப்ப தற்கு ‘கோட்டாக்கை’ என ஆண்கள் திரித்து தயாராவர். ஒவ்வொரு அரியையும் பெண்கள் அள்ளி எறிய, ஆண்கள் அரியைச் சிதறாமல் பிடித்து அடித்து வைக்கோலைப் போரில் எறிவர்.  ஒரு பெண் இரண்டு ஆண்களுக்கு அரியை அள்ளி  எறிவது வழக்கம். களத்து மேட்டில் அடித்த நெல்லை கருக்கால்  (பதர்) நீக்க காற்றில் தூற்றுவர் - இதற்கு ‘பொலி விடுதல்’ என்று பெயர். “காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்” என்பது தானியங்களைத் தூற்றுவது மட்டுமல்ல, வாழ்க்கையில் வாய்ப்புகள் வரும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதன் குறியீடு. விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில் மனித உழைப்பு குறைந்து, இயந்திரங்கள் பெருகின. முதலில் கதிரடிக்கும் இயந்திரம், பின் கதிர் அறுக் கும் இயந்திரம், நடவு இயந்திரம், கலை  எடுக்கும் இயந்திரம், வைக்கோல் சுருட்டும் இயந் திரம் என ஒவ்வொன்றாக தொழிலாளர்களின் வேலைகள் பறிபோயின. கிராமப் புறத்தில் விவசாய வேலைகள்  இல்லாததால், இன்றைய இளைய தலை முறைக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. வாழ்வாதாரத்திற்கு நிரந்தர வேலை இல்லாததால், நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுக் கிறார்கள். ஏக்கப் பெருமூச்சின் ஆவேசமே செங்கொடி கிராமப்புறத்தில் விவசாய வேலை மறுக்கப் பட்டதால், கட்டுமான வேலைகளை நம்பி நகர்ப்புறம் சென்றாலும், அங்கும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தால் வேலைகள் முடங்கியுள்ளன. குடும்பத்தைக் காப்பாற்ற வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதமான வேலை களை அரசும் ஆட்சியாளர்களும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே விவசாயத் தொழிலா ளர்களின் ஏக்கப் பெருமூச்சு. அந்த பெருமூச்சின் ஆவேச வெளிப்பாடே நம் கிராமங்கள் தோறும் பட்டொளி வீசிப் பறக்கும் செங்கொடியின் கம்பீரம். அந்த உதிரச் சிவப்பின் மாநாடு - தஞ்சை மாவட்ட மாநாடு இன்று துவங்குகிறது. மாநாடு வெல்லட்டும்!