districts

img

அவர்லேண்ட் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்திடுக!

மதுரை, டிச.16-  தமிழ்நாடு அரசு  - மதுரை மாந கராட்சி நிர்வாகம், அவர்லேண்ட் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய  வேண்டும். அராஜகமாக செயல் படும் அவர்லேண்ட் நிறுவன மேல்  மட்ட ஊழியர்களை வெளியேற்ற வேண்டும்.  எல்சிவி வாகனம், ஜென்ரல், டம்பர் பிளேசர், காம்பேக்ட், டிராக்  டர், ஆட்டோ உள்ளிட்ட ஓட்டு னர்களுக்கு அரசாணை 62 (2D)-ன்  படி குறைந்தபட்ச ஊதிய தினச் சம்ப ளமாக ரூ.850 வழங்க வேண்டும்.  ஓட்டுனர்கள் மற்றும் மாட்டுத்தா வணி ஆம்னி பஸ் ஸ்டாண்ட் -  காய்கறி மார்க்கெட் தூய்மை பணி யாளர்கள், வார்டுகளில் உள்ள துய்மைப்பணியாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா சட்டத்தின்படி  8.33 சதவீதம் போனஸ் வழங்கிட வேண்டும்.  மார்க்கெட் தூய்மை பணியா ளர்கள் மற்றும் மாநகராட்சி வார்டு களில் உள்ள தூய்மைப் பணியா ளர்களுக்கு கிருமி நாசினி, கை யுறை, காலுறை, குடிநீர் வசதியும்,  ஓய்வறை மற்றும் கழிப்பறை வசதி யும் செய்து கொடுக்க வேண்டும்.  தினக்கூலி, தொகுப்பூதியம், ஒப்பந்த துய்மைப் பணியாளர் களுக்கு தினச் சம்பளமாக ரூ.  754 வழங்கிட வேண்டும் என்று  உள்ளிருப்பு போராட்டம் திங்க ளன்று சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் என்.மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி அண்ணா மாளிகை யில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ம. பாலசுப்பிரமணியம் கோரிக்கை களை விளக்கி பேசினார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சம்மேளன மாநிலச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியம் சிறப்பு ரையாற்றினார். உள்ளிருப்பு போராட்டத்தில் பொருளாளர் கருப்பசாமி, செயல் தலைவர் ரவி  உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.