புதுக்கோட்டை, டிச.18:- பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ பாராட்டடினார். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கறம்பக்குடி வட்டார அளவிலான இலக்கிய மன்றப் போட்டிகள் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் தட்டாமனைப்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவிகள் 6 பிரிவுகளில் முதலிடத்தையும் ஒரு பிரிவில் மூன்றாம் இடத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். தமிழ் பேச்சுப் போட்டியில் ர.கவிநிலா, ஆங்கில பேச்சுப் போட்டியில் ரெ.ஹாசினி, தமிழ் கட்டுரைப் போட்டியில் வெ.ஹரிணி, தமிழ் கதை கூறுதல் போட்டியில் தே.மோகனாஸ்ரீ, ஆங்கிலம் கதை கூறுதல் போட்டியில் ரெ.ஹாசினி, ஆங்கில கவிதைப் போட்டியில் வெ.ஹரிணி ஆகியோர் முதலிடம் பெற்றனர். தமிழ் கவிதைப் போட்டியில் பா.ஜோஸ்மி மூன்றாம் இடம் பெற்றார். வெற்றிபெற்ற மாணவிகளை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில்,பள்ளி தலைமையாசிரியர் சத்தியபாமா, ஆசிரியர்கள் ஸ்டாலின்சரவணன், மரியசிபிலா, சுஜாதா, சகாய அர்ச்சனா, குணசுந்தரி, கங்கா உள்ளிட்டோரர் பங்கேற்றனர்.