districts

img

புதுக்கோட்டை அருகே பட்டாசு ஆலை விபத்து 5 பேர் படுகாயம் எம்.சின்னதுரை எம்எல்ஏ ஆய்வு

புதுக்கோட்டை, ஜூலை 31-  

      புதுக்கோட்டை அருகே பூங்குடி  கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 5 பேர் படுகாய மடைந்தனர். கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெறு பவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி னார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்  டது பூங்குடி கிராமம். இங்கு கோவில் பட்டியைச் சேர்ந்த சி.வைரமணி (53)  கடந்த 10 ஆண்டுகளாக சிறிய அளவி லான நாட்டு வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார். ஆலை யில் தினசரி பத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வேலைசெய்து வருவ தாகக் கூறப்படுகிறது.

     இந்நிலையில், ஞாயிறன்று மாலை யில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருக்கும்போது வெடி வெடித்தது. சரமாரியாக தொடர்ந்து வெடித்த இந்த விபத்தில் ஆலை இடிந்து  தரைமட்டமானது. தீ அருகில் உள்ள தைல மரக்காடுகளுக்கும் பரவியது. தீய ணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

     இதில் வெடித் தயாரிப்புப் பணி யில் ஈடுபட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த சி.வைரமணி (53), ஆர்.குமார் (38), கே.வீரமுத்து (31), ஏ.திருமலை (30), வெள்ளனூரைச் சேர்ந்த பி.சுரேஷ் (37) ஆகிய 5 பேர் படுகாயம டைந்தனர். இதனையடுத்து 5 பேரும்  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். வெள்ளனூர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

எம்.சின்னதுரை எம்எல்ஏ ஆய்வு

     வெடி விபத்து சம்பவத்தை அறிந்த வுடன் தொகுதி சட்டமன்ற உறுப்பின ரான எம்.சின்னதுரை, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ராகவி உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று  சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.  

    நடந்துள்ள விபத்து குறித்து உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தி னார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதோடு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடமும் அறிவுறுத்தினார்.