புதுக்கோட்டை, பிப்.9- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தீத்தான்விடுதி ஊராட்சிக்குட்பட்ட ஊரணிபுரம் கிராம மக்களின் குறைகளை கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழக்கிழமை கேட்டறிந்தார். கறம்பக்குடி தாலுகா தீத்தான்விடுதி ஊராட்சிக்குட்பட்ட ஊரணிபுரம் சந்தைப்பேட்டையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதடைந்துள்ளது. இதற்கு மாற்றாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைய உள்ள இடத்தை பார்வையிடுவதற்காக வியாழக் கிழமையன்று எம்.சின்னதுரை எம்எல்ஏ ஊரணிபுரம் கிராமத்திற்கு வந்திருந்தார். அவருடன் வட்டாட்சி யர் ராமசாமி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது, அவரிடம், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட கடை களை முறையாக ஏலம் விடுவ தில்லை. துப்புரவு பணிகள் நடை பெறுதில்லை. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல் அறை, கழி வறை, உணவுதானிய சேமிப்பு அறைகள் இல்லை. மேலும், பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சுட்டிக் காட்டினர். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, உங்களின் குறைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு, சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.