districts

img

ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டிடத்திற்கு எம்.சின்னதுரை எம்எல்ஏ., அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை, டிச.7-  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் 11  வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்திற்கு சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை வியா ழக்கிழமை அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.32  கோடி மதிப்பீட்டில் 11 புதிய வகுப்பறை களுக்கான கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டிடத்திற்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவர் பரமசிவம், ஆத்மா கமிட்டித் தலைவர் நியூஸ்  ராஜேந்திரன், அரசியல் கட்சிப் பிரமுகர்கள்  பழனிவேல், ராமையன், சரவணன், பெற்றோர்  ஆசிரியர் கழகத்  தலைவர் நடராஜன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்ன தாக பள்ளித் தலைமை ஆசிரியர் வி.பழனி வேலு வரவேற்க, ஆசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.