அரியலூர், அக்.27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட் டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய 13 ஆவது மாநாடு குருவாலப்பர்கோயில் தனி யார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப் பினர் எஸ்.குமார், எஸ்.மீனா ஆகியோர் தலைமை வகித்த னர். மாநாட்டுக் கொடியை மூத்த நிர்வாகி ராமசாமி ஏற்றி வைத்தார். மாநாட்டை மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா தொ டங்கி வைத்தார். முன்னதாக நடைபெற்ற பேரணியை மூத்த நிர்வாகி எஸ்.என்.துரைராஜ் கொடி யசைத்து தொடங்கி வைத் தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.சொக்க லிங்கம் வரவேற்றார். கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன் நிறைவுரை ஆற்றினார். ஒன்றியச் செய லாளராக எம்.வெங்கடா ஜலம் உட்பட 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமன ையில் 24 மணி நேரமும் மருத்துவ சேவை ஆற்ற வேண்டும். ஜெயங்கொண் டம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் சாலை, குடிநீர், பொது கழிப்பறை மற்றும் அனைத்துப் பகுதி களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் பொன்னேரி உள்ளிட்ட அனைத்து ஏரி குளங்களையும் தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. ஒன்றிய குழு உறுப்பி னர் இ.மைதீக்ஷா நன்றி கூறி னார்.