திருச்சிராப்பள்ளி, மார்ச் 7- திருச்சிராப்பள்ளி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கம்ப ரசம்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட எம்.கூடலூர் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறையால் 1995-ஆம் ஆண்டு 59 நபர்களுக்கு இல வச வீட்டுமனைப் பட்டாவுக்கான நமுனா வழங்கப்பட்டது. 28 ஆண்டுகளாகியும் இடத்தை அளவீடு செய்து கொடுக்காமலும், பட்டா வழங்காமலும் உள்ளனர். பலமுறை மனு கொடுத்தும், ஆர்ப் பாட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை நிலத்தை உடனடியாக அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டும். எம்.கூடலூர் பகுதியிலுள்ள ஊரா ட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி யில் படிக்கும் குழந்தைகளுக்கு குடிநீர் வசதி, பள்ளிக்குச் சுற்று சுவர் கட்டித் தர வேண்டும். முத்தரசநல்லூர் ஊராட்சியில் மருத்துவருடன் கூடிய ஆரம்ப சுகா தார நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி மக்கள் ஸ்ரீரங்கம் வட் டாட்சியர் அலுவலகம் முன் செவ் வாய் அன்று ஆர்ப்பாட்டம் நடத்தி னர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன் தலை மை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கார்த்திகேயன், ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தர்மா, கிளைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, செல்வராஜ், வீரமுத்து உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.
நவல்பட்டில் முற்றுகை
திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நவல்பட்டிலிருந்து அண்ணாநகர் செல்லும் கட்டளை வாய்க்கால் சாலை பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது. அன் றாடம் விபத்து ஏற்படுகிறது. உயிர்ப்பழி வாங்கும் சாலையை சீர்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நவல்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து போராட்டக்காரர் களுடன் வட்டார வளர்ச்சி அலு வலர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, “சாலை சீரமைப்பிற்கு ரூ.2.50 ஒதுக்கப்ட்டுள்ளது. ஆறு மாதத்திற்குள் சாலைப் பணிகள் முடிக்கப்படும் என உறுதியளித் தார். பேச்சுவார்த்தையில் தாலுகா செயலாளர் மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினர் தெய்வநீதி, ரவி, ராமமூர்த்தி, மகேந்திரன், சுப்ரமணி, தமிழ்செல்வன், அமீர், சித்ரா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.