districts

img

சிபிஎம் அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளராக எம்.ஆறுமுகம் தேர்வு

கரூர், அக்.18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரவக்குறிச்சி ஒன்றிய 9 ஆவது மாநாடு அரவக்குறிச்சி மெரினா மஹாலில் (தோழர் சங்க ரய்யா நினைவரங்கம்) நடை பெற்றது.  மாநாட்டிற்கு மருத முத்து, பொன்மணி ஆகி யோர் தலைமை வகித்தனர்‌.  ஒன்றியக் குழு உறுப்பினர்  பி.முருகேசன் செங்கொடியை  ஏற்றி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.கணேசன் வரவேற்றார். கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் மாநாட்டை துவக்கி வைத்து  பேசினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.ஆர்‌.ராஜாமுகமது வாழ்த்தி பேசினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.முரு கேசன் மாநாட்டை நிறைவு  செய்து பேசினார். கொத்தபாளையம் கிளைச்  செயலாளர் பி.தயாநிதி நன்றி கூறினார். அரவக்குறிச்சி  ஒன்றிய புதிய செயலாளராக எம்.ஆறுமுகம் தேர்வு செய்யப்பட்டார்.  அரவக்குறிச்சி புறவழிச் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண் டும். அரவக்குறிச்சி ஒன்றி யத்தில் முருங்கை பவுடர் தயாரிப்பு தொழிற்சாலை துவக்கிட வேண்டும். கரூர் -  மதுரை செல்லும் பேருந்து கள் அரவக்குறிச்சி பைபாஸ்  சாலையில் நின்று செல்ல  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.