திருவாரூர், நவ.19 - திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஊராட்சிகளில் பணிபுரியும் ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் நிலுவை தொகையுடன் வழங்கிட வேண்டும். ஓஎச்டி ஆபரேட்டர் களுக்கு தமிழக அரசு அறிவித்த ஏழா வது ஊதியக் குழு அறிக்கையின்படி, ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் டி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, மாவட்ட பொரு ளாளர் மாலதி, மாநில ஒருங்கிணைப்பா ளர் ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் (கிராம ஊராட்சி) காமராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ஜோதிபாசு, திரு வாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள், என்எம்ஆர் ஊழியர்கள் சங்கம் மற்றும் சிஐ டியு திருவாரூர் மாவட்டக் குழு நிர்வாகி கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.