districts

உயிர் காக்கும் மருந்துகளை இருப்பு வைக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, நவ.11 - திருச்சி காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத் தில் செயல்படாமல் உள்ள ஸ்கேன் இயந்தி ரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும். இசிஜி, எக்ஸரே வசதி ஏற்படுத்த வேண்டும். நாய்க்கடி, பாம்புகடி உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளை தேவைக்கு ஏற்ப வைத்திருக்க  வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர் ஆலோசனையுடன் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் கிளைகள் சார்பில் வெள்ளியன்று காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக் குழு உறுப்பி னர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச்  செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா, பகுதிச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் பேசினர். பகுதிக் குழு உறுப்பினர்கள் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நல்லையா நன்றி கூறினார்.