தஞ்சாவூர், ஆக.13-
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட 61 ஆவது மாநாடு, பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
சனிக்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக் கிழமை பொது மாநாடு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்டத் தலை வர் சே.செல்வராஜ் தலைமையில் நடை பெற்றது.
பட்டுக்கோட்டை நகர் மன்றத் தலை வரும், மாநாட்டு வரவேற்பு குழு தலை வருமான சண்முகப்பிரியா செந்தில் குமார் வரவேற்று பேசினார். மாநாட்டை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் வி.ரமேஷ் துவக்கி வைத்தார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை சிறப்பு ரையாற்றினார். காப்பீட்டு கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட பொதுச் செயலா ளர் வ.சேதுராமன் நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள்
இந்த மாநாட்டில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவ ராக சே.செல்வராஜ், பொதுச் செயலாள ராக வ.சேதுராமன், பொருளாளராக எஸ்.எல்.ஸ்ரீதர், உழைக்கும் பெண்கள் குழு ஒருங்கிணைப்பாளராக ஆர்.சீதலா, இணை ஒருங்கிணைப்பாளராக என்.விஜயலட்சுமி, செயற்குழு உறுப் பினர்களாக எஸ்.பாலசுப்பிரமணியன், வி.சந்திரமோகன், ஆர்.நிர்மலா, சிறப்பு அழைப்பாளர்களாக கே.லட்சுமணன், எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.ஜேசுதாஸ், ஆர்.புண்ணியமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
எல்.ஐ.சி நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகவே செயல்பட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இன்சூரன்ஸ் பிரிமியத்திற் கான ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும். தேசத்தின் ஒற்று மையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.