districts

img

எல்ஐசி காப்பீடு வார விழா பேரணி

அரியலூர், செப்.5- எல்ஐசி காப்பீடு வார விழாவையொட்டி, அரியலூர் கிளை அலுவலகம் சார்பில் பேரணி வியாழக்கிழமை நடை பெற்றது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை எல்ஐசி காப்பீடு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு, அரியலூ ரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி வியாழக்கிழமை முகவர்கள் சார்பில் பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையிலி ருந்து எல்ஐசி அலுவலகம் வரை பேரணியை கிளை முதுநிலை மேலாளர் பி.ஜெய பாலன் தொடக்கி வைத்தார். பேரணியில் எல்ஐசி-யின் செயல்பாடுகள், தற்போது காப்பீடு நிலவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. நிகழ்ச்சியில், உதவி கிளை மேலாளர் சக்திவேல், முகவர் கள் பாலசுப்பிரமணியன், முருகானந்தம், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கிளை அலுவலகத்தில் வாடிக் கையாளர்கள், பணியாளர்க ளுக்கு இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஜெயங்கொண்டத்தில் எல்ஐசி காப்பீடு வார விழாவை யொட்டி நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணியை கிளை மேலாளர் பிரபாகரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் அலு வலர்கள், முகவர்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.