districts

img

தஞ்சாவூரில் பேருந்து நிழற்குடையில் நூலக வசதி

தஞ்சாவூர், அக்.24 -  தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலுள்ள ஆலமர பேருந்து நிறுத்தத்தில் தஞ்சாவூர் இன்னர்வீல் சங்கம் சார்பில் புதிதாக நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் புதனன்று மாலை திறந்து வைத்தார்.  இந்த நிழற்குடையில் மூன்று தட்டுகள் கொண்ட அலமாரியுடன் கூடிய நூலக வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதில், 6 நாளிதழ்கள், வார இதழ்கள், ஏறத்தாழ 20 சிறுகதை நூல்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து தஞ்சாவூர் இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் கூறுகையில், பொதுமக்க ளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவ தற்காக இந்நிழற்குடையில் நூலக வசதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தத் தில் பேருந்துக்காகக் காத்திருக்கும் நேரத்தில் பயணிகள் வாசிப்பதற்கு வாய்ப்ப ளிக்கும் விதமாக நாளிதழ்கள், வார இதழ்கள், சிறுகதை நூல்கள் வைக்கப் பட்டுள்ளன. இந்நூலகத்துக்கு நூல்களைத் தானமாகக் கொடுக்க முன் வருபவர்கள் வரவேற்கப்படுகின்றனர்” எனத் தெரிவித்த னர்.  இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, இன்னர்வீல் சங்க முன்னாள் நிர்வாகிகள் விஜயா சுவாமிநாதன், சுந்தரி சுப்பிரமணியன், உஷாநந்தினி விஸ்வ நாதன், நிர்மலா வெங்கடேசன், சோபியா சோமேஷ், சண்முகவடிவு, உமாபதி, தலைவர் ரேகா குபேந்திரன், தனலட்சுமி, திருவள்ளு வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதுபோல் நிழற்குடை நூலகம் கேரள மாநிலத்தில் செயல்படுகிறது என்பது குறிப்பி டத்தக்கது.