districts

img

நூறு சதவீதம் வாக்களிப்போம்: விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர்/அரியலூர், மார்ச் 21- தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் நேர்மை யாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை  வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  பேராவூரணியில் நீலகண்டப் பிள்ளை யார் ஆலயத்தில் தொடங்கி, வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற விழிப்புணர்வு  பேரணியில், உதவி தேர்தல் நடத்தும் அலு வலர் பூஷணகுமார், வட்டாட்சியர் தெய்வானை, அரசு கலைக் கல்லூரி பேராசிரி யர் ராணி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டனர்.  அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி மாணவிகளிடம், வாக்களிப்பதன் அவசியம் குறித்து புதன் கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலு வலர் ஆர்.ராமலிங்கம், வாக்களிப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். மேலும்  மக்களவைத் தேர்தலில், 100 சதவீதம் வாக்க ளிப்பதை விளக்கும் வகையில் 100 என்ற எண்ணிக்கை வடிவில் மாணவிகளை நிறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.