districts

img

நூறு சதவீதம் வாக்களிப்போம்! வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு மயிலாடுதுறை, ஏப்.3 -  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் நாடாளு மன்றத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவினை வலியுறுத்தி பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மயிலாடுதுறை மாவட்ட  ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலு வலருமான ஏ.பி.மகாபாரதி தலை மையில் நடைபெற்றன. நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி, மயிலாடுதுறையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. அந்த வகை யில், இத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தவறாது வாக்க ளிக்க வேண்டும் என வலியுறுத்தி, சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  இந்நிலையில், புதனன்று மயி லாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் மாவட்ட நிர்வா கம் மற்றும் தனியார் தொலைக் காட்சி இணைந்து நடத்திய வாக்கா ளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து  கொண்டார். விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் குழு  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என  வலியுறுத்தி மகளிர் குழு உறுப்பி னர்கள், அங்கன்வாடி பணியாளர் கள் என மொத்தம் 500-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட மாபெ ரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்  கொடி யசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி மன்னம்பந்தல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி ஏ.வி.சி. கல்லூரியில் நிறைவடைந்தது. பின்பு மாற்றுத்திற னாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. அப்போது, இருசக்கர வாக னங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி மாவட்ட  ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தி னார். மூன்றாம் பாலினத்தவர்கள் தவ றாது வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி, அவர்களுக்கு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப் பட்டன. தொடர்ந்து, வாக்காளர் விழிப் புணர்வு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் மகாபாரதி முதல் கையெ ழுத்திட்டு தொடங்கி வைத்தார்.