மயிலாடுதுறை, செப்.3 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம்”; “பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம்” விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்பு, பெண் குழந்தைகள் பாது காப்பு தொடர்பான விழிப்புணர்வு பதா கையை வெளியிட்டு, ஆட்சியர் மகா பாரதி பேசுகையில், “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசா னது பெண் குழந்தைகளைப் பாது காத்து அவர்கள் கல்விக்கு ஊக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. வளரும் பருவத்தில் திருமண பாரம் வேண்டாம். குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்ட னைக்குரிய குற்றம். குழந்தை திரு மணம் தொடர்பான புகார்களை தெரி விக்க கட்டணமில்லா தொலைபேசி எண்.1098 அல்லது 1091 அல்லது 181 என்ற எண்களை அழைக்கலாம். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். தனிப்பட்ட இடத்திலோ அல்லது பொது இடத்திலோ வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவை யான உதவிகள் மற்றும் ஆதரவை “சகி” என்ற ஒருங்கிணைந்த சேவை மையத் தின் மூலம் பெறலாம். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்டரீதி யான, மருத்துவ ரீதியான, காவல்துறை ரீதியான உதவிகளையும், உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் பெறலாம். தொடர்புக்கு மகளிர் உதவி மைய எண்.181-ஐ அழைக்கலாம். ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப் பினை உறுதி செய்திட, அனைத்து காவல் நிலையத்திலும் குழந்தை நேய பாதுகாவலர் உள்ளார். பெண் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை யும், வீரத்தையும் ஊட்டி பாதுகாப்பது நம் கடமை” என்றார். இந்த விழிப்புணர்வு வாகனமானது, மயிலாடுதுறை, செம்பனார்கோவில், கொள்ளிடம், குத்தாலம், சீர்காழி ஆகிய வட்டாரத்திற்குட்பட்ட கிராமங் களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.