districts

img

சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம் விழிப்புணர்வு பிரச்சாரம்

பெரம்பலூர், டிச.31-  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம் என்ற தலைப்பில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இயக்கத்தின் மாவட்டத் தலைவர் கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இயக்கத்தில் மாவட்டப் பொருளாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். இந்த பிரச்சாரத்தினை முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் என்.செல்லத்துரை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டியன், விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கலையரசி, எழுத்தாளர் இரா. எட்வின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த விழிப்புணர் பிரச்சார பயணம், நான்கு ரோடு, மூன்று ரோடு, கிருஷ்ணா தியேட்டர், கடைவீதி, காமராஜர் வளைவு ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்து, பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.  இந்த பிரச்சார பயணத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  சுவரொட்டி வெளியீடு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் “சாதியம் தகர்த்து மனிதம் வளர்த்திட 2025 புத்தாண்டு வருக” என்ற சுவரொட்டியை, பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் வெளியிட சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மூன்று ரோடு, நான்கு ரோடு, காமராஜர் வளைவு, கடைவீதி, ரோவர் ஆர்ச், கிருஷ்ணா தியேட்டர் உட்பட பல இடங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.  கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.