மதுரை, ஆக.22- திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், வாக்காள பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் திங்களன்று மாலை செல்லூர் 50அடி சாலையில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர் கே.அலாவுதீன் தலைமையில் நடை பெற்றது. பகுதிக்குழு உறுப்பினர்கள் கே. ஜாஹீர் உசேன், கே.குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயலா ளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், மாமன்ற உறுப்பி னர் டி. குமரவேல், பகுதிச் செயலாளர் ஏ. பாலு, திமுக வட்டச் செயலாளர்கள் 27 வது வார்டு எம்.கருப்பு ராஜா, 28 வது வார்டு பவர் மணிகண்டன், மதிமுக வழக்கறிஞர் நாக ராஜன், பகுதிச் செயலாளர் பொன்பாலு, வட்டச் செயலாளர் காளிராஜா, மகளிர் அணி செயலாளர் பசுபதி அம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்புரையாற் றினார். அவரது உரையின் பகுதிகள் வருமாறு: 13 முறை தண்ணீர் குடித்த பிரதமர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந் தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நன்றி தெரி விப்பு கூட்டம் மட்டுமல்ல. பாஜக தமிழ் நாட்டை எப்படி வஞ்சித்துள்ளது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் கூட்டம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மதுரையிலும் இந்தியா கூட்டணிக்கட்சி களின் ஏற்பாட்டல் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். 32 ஆண்டுகளுக்கு பின் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் 400 இடங்களில் வெற்றி பெறு வோம் என்று கர்ஜித்த மோடி அவர்கள், தேர்த லுக்குப் பிறகு நடந்த முதல் கூட்டத் தொடரில் முதல் பேச்சு ஒன்றேகால் மணி நேரம் பேசி னார். ஆனால் 13 முறை தண்ணீர் குடித்தார். 13 முறை தண்ணீர் குடிக்க வைத்த பெருமை இந்திய வாக்காளர்களைச் சாரும். மணிப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாளுமன்ற உறுப்பின ர் இரண்டு நிமி டம் பேசுவதற்கு அனுமதி கேட்கின்றார். ஓராண்டாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இரண்டு நிமிடம் பேசு வதற்கு அவருக்கு அனுமதி அளிக்க வில்லை. மணிப்பூர் நாடாளுமன்ற உறுப்பி னர் பேசாமல் பிரதமர் பேசக்கூடாது என்று குரல் எழுப்பினோம்.
தமிழக ரயில்வே: ரூ.600 கோடி பறிப்பு
தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் மோடி அரசு தமிழ்நாட்டின் ரயில்வேத் துறைக்கு 900 கோடியை அறி வித்தது. தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பின்னர் 900 கோடியில் 600 கோடி என்பதை காணவில்லை. இப்போது 300 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு ஒரு புதிய ரயில்வே வழித்தடத்தை கேட்டுக் கொண்டிருக்கின் றோம். ஏற்கனவே இது ஒப்புதல் ஆகிவிட்டது. நிலமும் கையகப்படுத்தப்பட்டு விட்டது. ஒன் றிய அரசு பிப்ரவரி மாதம் வெளியிட்ட இடைக் கால பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால் இப்போது தேர்தலுக்குப் பின் அந்த 100 கோடியை 18 கோடியாக மாற்றிவிட்டது. தமிழ்நாட்டில் சுமார் ஆறு திட்டங்களுக்கு 400 முதல் 450 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்தது. அது எல்லாம் தற்போது எடுக்கப் பட்டு விட்டது. தற்போது ரயில்வேயில் சில திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பலரும் ஆச்ச ரியமாக கேட்கின்றார்கள், எப்படி சார் 1000 ரூபாய் தான் ஒதுக்கி உள்ளார்களா என்று. ஆம் ஆயிரம் ரூபாய் தான் ஒதுக்கி உள்ளார் கள். இதை வைத்து என்ன செய்வது என்று நிதி அமச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களைத் தான் கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டின் சிறப்பு
இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பு தமிழ்நாட்டிற்கு இருக்கின் றது. அது என்னவென்றால் தமிழ்நாட்டில் தான் பத்திற்கும் மேற்பட்ட மிகப்பெரிய நகரங்கள் இருக்கின்றன ( சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு. ஓசூர், திருநெல்வேலி, தூத்துக்குடி) ஆனால் மற்ற எந்த மாநிலங்களை எடுத்தாலும் இரண்டு அல்லது மூன்று பெரிய நகரங்கள் தான் இருக்கும் நான்காவதாக ஒரு பெரிய நகரம் இருக்காது. எனவே தான் உள் கட்ட மைப்பிற்கு இங்கு அதிக நிதி தேவை உள் ளது. இப்படி இந்த பத்து நகரங்களில் தான் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி. உள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி வரி அதிகம் கொடுக்கும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. முதலா வது மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. ஏனென்றால் எல்லா மிகப்பெரிய நிறுவ னங்களும் மும்பையில் உள்ளன. அதனால் அங்கு வருமானம் வருவது பெரிய விஷயம் அல்ல. ஆனால் தமிழகத்தில் சின்ன சின்ன தொழில்களாக ஆயிரக்கணக்கில் இருக்கின் றன. அதேபோல் பெண் தொழில் முனை வோர் அதிகம் கொண்ட மாநிலமாக உள்ளது. தமிழ்நாடு தான். கல்வி வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, பள்ளியை முடித்து கல்லூரி செல்பவர்கள் 52 சதவீதமாக இங்கு உள்ளார்கள். இன்னும் 30 முதல் 40 ஆண்டுகள் ஆனாலும் வட மாநிலங்கள் இதை எட்டிபிடிக்க முடியாது. ஆனால் நாம் கொடுக்கும் ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரிக்கு அவர்கள் கொடுப்பது வெறும் 29 பைசா தான். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு 69 ஆயிரம் கோடி தேவைப்படு கிறது இதில் தமிழக அரசு 25 ஆயிரம் கோடி ஒன்றிய அரசு 24 ஆயிரம் கோடி மீதி தொகை கடனாக பெறுவது என்று முடிவு செய்யப் பட்டது. ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டு திட்டங்களை துவக்கியுள்ளது இதில் தமிழக அரசு 23 ஆயிரம் கோடி செலவழித்து விட்டது ஆனால் ஒன்றிய இந்த திட்டத்திற்கு எங்க ளுக்கும் சம்பந்தம் இல்லை என்று இப்போது சொல்கிறது. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் திட்டத்திற்கான வரைபடம் எல்லாம் போடப்பட்டுவிட்டது. ஆனால் அதை திருப்பி அனுப்பி உள்ளார்கள். அதற்குப் பின்பு துவங்கப்பட்ட சூரத் மற்றும் ஆந்திரா வில் ரூ.2000 கோடி திட்டத்தில் புதிய வேலை யை துவக்கி உள்ளார்கள்.
எய்ம்ஸ் அநீதி
அதேபோல் மதுரை எய்ம்ஸ் எத்தனை பெரிய அநீதி. கடந்த ஐந்து ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட முறை நாடாளுமன்றத் தில் பேசினேன். இந்தியாவில் உள்ள எய்ம்ஸ்கள் நிலை பற்றி ஒரு பட்டியல் கொடுங்கள் என்று இப்போது கேட்டால் அமைச்சர் நான்கு பக்கத்திற்கு பதில் அனுப்பியுள்ளார். அந்தப் பட்டியலில் மதுரை எய்ம்ஸ் பெயரே கிடையாது. மதுரை எய்ம்ஸ் பெயர் ஏன் பட்டியலில் இல்லை என்று கேட்ட தற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார். தொழில்நுட்பக் கோளாறில் அழிந்துவிட்டது என்று கூறுகிறார். தொடர்ந்து ஆறாண்டு களாக எத்தனை முறை தொழில்நுட்பக் கோளாறால் அழியும் என்பது தெரிய வில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் முழுவதிலும் கொண்டுவரப்படும் திட்டங்க ளுக்கு தொழில்நுட்ப கோளாறு எப்படி வரு கிறது என்று தெரியவில்லை.
விமான நிலையத்திற்கு பூட்டு
மோடி அரசின் வஞ்சகத்திற்கு மதுரை விமான நிலையத்தை விட ஒரு சிறந்த உதாரணம் எதுவும் தேவையில்லை. மோடி அவர்களின் தொகுதியான வாரணாசிக்கும் மதுரைக்கும் ஒரே நேரத்தில் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்காக விமான நிலைய ஓடுபாதை மற்றும் சுரங்கப்பாதை அமைப்பதற்கான திட்டத் திற்கான முன்மொழிவு போகிறது. அதற் கான நிதி 600 கோடி ரூபாய். வாரணாசிக்கு 600 கோடி ரூபாய் நிதி கொடுத்து ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டன. ஆனால் இன்றைக்கு வரை மது ரைக்கு கொடுக்கவில்லை கேட்டால் சுரங்கப் பாதை அமைப்பதை விட சுற்றுப்பாதை அமைத்தால் நூற்றி ஐம்பது கோடி ரூபாயில் பணிகள் முடிந்து விடும். 450 கோடி ரூபாய் பணம் மிச்சமாகிவிடும் என்று கூறுகி றார்கள். என் இதையே வாரணாசிக்கு செய்தி ருக்கலாமே? அதேபோல் இரவு நேர விமான சேவை பாதுகாப்பிற்கு மதுரை விமான நிலை யத்திற்கு பாதுகாவலர்களுக்கு மாதம் 30 கோடி ரூபாய் செலவாகும். அதை ஒதுக்க மறுத்து இரவு நேரத்தில் விமான சேவை இல்லாமல் பூட்டு போடும் வேலையை ஒன்றிய அரசு செய்துள்ளது.
எத்தனை மேம்பாலங்கள்...
இரண்டாவது முறையாக நாடாளு மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தற்குப்பின் ஒரு முதல் வெற்றியை பெற்றுள்ளோம். திண்டுக்கல், கன்னியா குமரி நான்கு வழிச்சாலையில் துவரி மான் -மேலக்கால் சந்திப்பு; அப்பகுதி யில் மேம்பாலம் கிடையாது. இதனால் ஏரா ளமான விபத்துக்கள் நடக்கின்றன. குறிப் பாக ஒரு வாரத்திற்கு 21 விபத்துக்கள் நடக்கும் பகுதியாக இருந்துள்ளது. தேர்தலுக்கு முன்பே நான் ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை நேரில் சந்தித்து துவரிமான் - மேலக்கால் சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன் அப் போது அவர் என்னிடம் உங்கள் தொகுதி யில் நீங்கள் எத்தனை மேம்பாலம் தான் கேட்பீர்கள் என்று கேட்டார். அந்த அடிப்ப டையில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை களில் அதிக மேம்பால திட்டங்களை வாங்கி செயல்படுத்தியவர்கள் நாம் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். பாலம் கட்டுவதற்கான 46 கோடி ரூபாய் நிதி என்பது ஒதுக்கப்பட்டு விட்டது. 18வது நாடாளுமன்றத்தில் ஒரு முதல் வெற்றியை பெற்று விட்டோம். வெற்றி பெற்றால் என்ன செய்வார்கள் என்று கேட்ட பாஜகவினருக்கு சொல்லிக் கொள்கிறோம். முதல் வெற்றி 46 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேம்பாலம் கட்டுமான பணிக்கான நிதியை பெற்று வந்துள்ளோம். மதுரையினுடைய ரயில் நிலையம். விமான நிலையம் என்று மதுரையினுடைய பொது போக்குவரத்து வளர்ச்சி என்பது என் பது மதுரையினுடைய தொழில் வளர்ச்சி, மதுரையினுடைய சிறு - குறு தொழில்களின் வளர்ச்சியாகும். இவ்வாறு அவர் பேசினார். (ந.நி)